Monday, February 16, 2026

உடலை சுத்தம் செய்ய காய்கறி பழங்கள்

உடலை சுத்தம் செய்ய காய்கறி பழங்கள்



CAN (Citizen Access Number) எண்

CAN (Citizen Access Number) எண்

CAN (Citizen Access Number) என்பது தமிழ்நாட்டின் -சேவை (e-Sevai) இணையதளத்தில், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற பல்வேறு அரசு சேவைகளைப் பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான 16 இலக்க அடையாள எண் ஆகும்இது KYC ஆவணமாகச் செயல்பட்டு, விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குகிறது. 

CAN எண் பற்றிய முக்கிய தகவல்கள்:

·         நோக்கம்: -சேவை மூலம் சான்றிதழ்கள் பெறும்போது, ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுவதைத் தவிர்த்து, இந்த எண்ணைப் பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்கலாம்.

·         பதிவு: TNeGA இணையதளத்தில் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்து இந்த எண்ணைப் பெறலாம்.

·         பயன்கள்:

o    வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றுக்கு விண்ணப்பித்தல்.

o    முன்னர் விண்ணப்பித்த சான்றிதழ்களின் நிலையைச் சரிபார்க்கலாம்.

o    தனிப்பட்ட விவரங்களை மீண்டும் டைப் செய்ய வேண்டியதில்லை. 

குறிப்பு: இது மியூச்சுவல் ஃபண்டில் பயன்படும் Common Account Number (CAN) என்ற எண்ணிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. 

பாட்டி சொல் கேள்

பாட்டி சொல் கேள்

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

நீரால் கோலம் போடாதே

நெற்றியைக் காலியாய் விடாதே

குச்சியைக் கொளுத்தி வீசாதே

இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே

காலையில் அதிகம் தூங்காதே

தொடையில் தாளம் போடாதே

தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே

நகத்தை நீட்டி வளர்க்காதே

ஆலயம் செல்லத் தவறாதே

அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே

சந்தியில் நீயும் உண்ணாதே

விரிப்பைச் சுருட்ட மறக்காதே

பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே

ஈரம் சொட்ட நிற்காதே

நாமம் சொல்ல மறக்காதே

நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே

நின்று தண்ணீர் குடிக்காதே

எதையும் காலால் தட்டாதே

எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே

எந்தன் குடியில் மூத்தோரே

எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே

என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள். ஆழமான வாழ்வியல் நெறிமுறைகள். இனியாவது இதையெல்லாம் நாமும் பின்பற்றவோம். நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம்.

ராமேஸ்வரம் ஒரு தீவு

ராமேஸ்வரம் ஒரு தீவு



ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது வெறும் கடற்கரை..

ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..

ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.

ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.

இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.

அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.

தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்