Thursday, December 24, 2020

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

 

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

 


          இந்த 2020ம் ஆண்டு துவக்கம் முதலே பல பிரச்சனைகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. கொரோனாவில் துவங்கி, பல்வேறு துறைகளை சார்ந்த பல ஜாம்பவான்கள் இந்த ஆண்டில் இயற்கை எய்தியது உலக மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.  துன்பம், துயரங்கள் அனைத்தும் நீங்கி, உங்க மக்கள் இடையே மீண்டும் இயல்பு வாழ்க்கையும், பேரின்பமும் இந்த கிறித்துமஸ் நாளில் இருந்து பொங்கட்டும்.

            சாதி, மத, இன வேறுபாடு இன்றி, மனிதம் மட்டும் உலக மக்களின் உள்ளத்தில் மேலோங்கட்டும். இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமின்றி, கொரோனா போன்ற உலக வைரஸ் தொற்று பரவலின் போதிலும் பணம், புகழ், சாதி, மதம், இனம் எல்லாம் வெறும் தூசு, மனிதனை, மனிதன் காக்க மனிதம் மட்டுமே உதவும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது 2020ம் ஆண்டு.  இயற்கையும், உலகமும் நமக்கு மீண்டும், மீண்டும் உரைப்பதும், உணர்த்துவதும் ஒன்று தான். அது அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால், எத்தகைய சவால்களையும், துயரங்களையும் எளிதாக தாண்டி வரலாம் என்பதே. இந்த கிறிஸ்துமஸ் தினம், உலகம் முழுவதும், உலக மக்கள் அனைவர் இடையேயும், சமத்துவம் பொங்க செய்யும் பெருவிழாவாக அமையட்டும்...

வாழ்த்துக்கள்

                  
இந்த கிறிஸ்துமஸ் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அளிக்கும் நினைவுகளை நமக்கு தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்



வைகுண்ட ஏகாதசி

 

வைகுண்ட ஏகாதசி

 வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது, ஏகாதசி என்பவர் யார் அவரின் புராண கதை என்ன, சொர்க்க வாசல் ஏன் திறக்கப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

 

            இந்துக்களின் மிக முக்கிய விஷேசங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாதத்தில் நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம். இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், ‘வைகுண்ட ஏகாதசிஎன இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைப்பெறுகிறது. பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

 

வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது?


           தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார். வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள். முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினத்தை வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

 

சொர்க்க வாசல் உருவான கதை


        படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும். மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன.  விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார். அப்போது அவரின் இரு காதுகளிலிருந்து காது அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் என அரக்கர்களாக உருவெடுத்தன.  அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை அந்த இரட்டையர்கள் திருடி சென்றர். அப்போது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களை திரும்ப கொண்டு வந்தார்.  

               பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க இறைவன் புறப்பட்டார்.  மது, கைடபருடன் போரிட்ட பெருமாள் அவர்களை அழிக்க முற்பட்டார். அப்போது அந்த சகோதரர்கள் சரணடைந்தனர்.  உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.  அவ்வாறே அவர்களுக்கு பெருமாள் அருளினார். மேலும் எங்களைப் போல பலரும் இந்த பாக்கியத்தைப் பெற வேண்டும் எனப்தற்காக திருமாலிடம் கேட்டுக் கொண்டனர். அதோடு வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தங்காள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என அசுர சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.  இதன் காரணமாக தான் வைகுண்ட வாசல் உருவானது. அதோடு மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.