Tuesday, May 14, 2019

சுப ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள்!


சுப ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள்!


            சு ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள். நாள் நட்சத்திரம் பார்ப்பது போலவே சுபஹோரையில் செய்யும் செயல்களும் ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க, நமக்கு பெரிதும் உதவிடும். இதை அறிந்துகொள்வது எப்படி 
           இதைப் பற்றி அறிந்துகொள்ள ஜோதிடப் புலமையோ, பெரிய அளிவிலான நிபுணத்துவமோ தேவையில்லை. சாதாரணமாக தேதி காலண்டரைப் பார்த்தே இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இதற்கு, பஞ்சாங்கமோ, ஜோதிட நூல்களோ தேவையில்லை. இது மணியை வைத்து ஜோதிடம் கூறும் முறை.
ஒரு நாளின் 24 மணியில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செலுத்தும். நவக்கிரகங்களில் ராகு, கேது என்ற சாய கிரகங்களுக்கு இதில் இடமில்லை. ஆக மீதமிருக்கும் சப்த (ஏழு) கிரகங்கள் மட்டுமே மாறி மாறி தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன
1. சூரியன், 2. சந்திரன், 3. செவ்வாய், 4. புதன், 5. வியாழன், 6. வெள்ளி, 7. சனி ஆகிய ஏழு கிரகங்களும் தங்களுக்குள் முறையான ஒரு அலைவரிசையில் மாறிமாறி ஆதிக்கம் செலுத்துகின்றன
வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி ஆகும். அவை, ஞாயிற்றுக்கிழமைக்கு சூரியன் அதிபதி, திங்கள்கிழமைக்கு சந்திரன் அதிபதி. செவ்வாய்க் கிழமைக்கு செவ்வாய் அதிபதி,
புதன் கிழமைக்கு அதிபதி புதன், வியாழக்கிழமைக்கு அதிபதி குரு, வெள்ளிக் கிழமைக்கு அதிபதி சுக்கிரன், சனிக்கிழமைக்கு அதிபதி சனி
கிரகம் ஆகும்

ஒரு நாளின் அதிபதியாக வருகின்ற அந்த கிரகமே அந்த நாளின் முதல் ஹோரைக்கு அதிபதி. இது சூரிய உதயத்திலிருந்து முதல் ஒரு மணிநேரமே முதல் ஹோரை. அதிலிருந்து ஒவ்வொரு மணிநேரமும் ஒரு ஹோரையாகக்  கருதப்படும். உதாரணமாக, வியாழக்கிழமை அன்று முதல் ஹோரைக்கு அதிபதி குரு.
இரண்டாவது ஹோரையின் அதிபதியை கணக்கிட வியாழக்கிழமைக்கு முந்தைய நாளான புதன்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிரகம்தான் வியாழக்கிழமையின் இரண்டாவது ஹோரைக்கு அதிபதி
அடுத்து செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய நாள் திங்கள்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையின் அதிபதியான சூரியன்தான்  முன்றாவது
ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் சனிக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் வெள்ளிக்கிழமையின் அதிபதியான சுக்கிரன்தான் நான்காவது.
வெள்ளிக்கிழமைக்கு  முந்தைய நாளான வியாழக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் புதன்கிழமையின் அதிபதியான புதன்தான் ஐந்தாவது.  
புதன்கிழமைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையை விடுத்து, அடுத்து வரும் திங்கள்கிழமையின் அதிபதியான சந்திரன்தான் ஆறாவது.  
திங்கள்கிழமைக்கு  முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையை விடுத்து, அடுத்து வரும்  சனிக்கிழமையின் அதிபதியான சனிதான் ஏழாவது ஹோரை.
அப்படிப் பார்க்கும்போது 1. குரு 2. செவ்வாய், 3. சூரியன், 4. சுக்கிரன், 5. புதன், 6. சந்திரன், 7. சனி ஹோரை என்று வரும்.
 8-
வது மணி முதல் மீண்டும் குரு ஹோரை துவங்கும். இப்படி தொடர்ச்சியாக  வந்து மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ஹோரையாக சுக்கிர ஹோரையே வரும்.
இப்படி வருவதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஹோரைகள் சுப பலன்களைத் தரக்கூடியதாகும். சூரியன் மத்திம பலனை தரவல்லதாகவும் சனி, செவ்வாய்  தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் அமையும்
ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் நாம் சுபகிரக ஹோரைகளில் ஆரம்பித்தால் அந்தக் காரியம் நமக்கு காரிய சித்தியைக் கொடுக்கும். அசுப கிரஹ ஹோரைகளில் ஆரம்பித்தால், அந்த காரியத்தில் தடை ஏற்பட்டு தோல்வியைச் சந்திக்கநேரிடும்.


குடும்பத்தில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வீட்டு பூஜை குறிப்புகள்

குடும்பத்தில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வீட்டு பூஜை குறிப்புகள்


பாகம் 2

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.