Tuesday, January 15, 2019

திருப்புல்லாணி.

திருப்புல்லாணி.


           எட்டு யானைகளுடனும் எட்டு நாகங்களுடனும் கூர்மத்தை (ஆமையை) ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது சந்தான கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார் இவரை தசரத சக்ரவர்த்தி, பித்ருக்களின் மகிழ்ச்சிக்காகவும், புத்திர பாக்கியத்துக்காகவும் பிரதிஷ்டை செய்தாராம். பக்தர்கள் இங்கு வந்து நாகப் பிரதிஷ்டை செய்தால், ஏழு தலைமுறைகளுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் என்கிறது புராணம்.

            இவர்கள் தவிர, பிராகாரத்தில் ஸ்ரீஆண்டாள், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், உடையவர் ஸ்ரீஇராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஐந்து நிலைகளோடு கூடிய அழகான கோபுரம், எதிரில் மருத்துவ குணம் நிறைந்த சக்கர தீர்த்தக் குளம், பெருமாள் சந்நிதிக்கு இடதுபுறம் வருண தீர்த்தக் கிணறு என அழகான அமைப்புடன் ஆலய வளாகம் காட்சியளிக்கிறது..

           இவ்வாலயத்துத் தல விருட்சம் அரசமரம் எனினும் புல்லாரண்யம் எனப் புகழ்பெற்ற இவ்விடத்தில் ஒருகாலத்தில் தர்ப்பைப் புல் ஏராளமாக வளர்ந்திருந்ததால், தர்ப்பைப் புல்லுக்கும் இங்கு முக்கியத்துவம் அதிகம். ராமனைப் பற்றிய கதை எந்த நூலில், எம்மொழியில் எழுதப்பட்டாலும் சேதுவின் பெருமை விடாமல் பேசப் படுகிறது. திருப்புல்லாணியிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது சேதுக் கடற்கரை. எத்தகைய பாபத்தையும் பார்த்த அளவிலேயே போக்கடிக்கவல்லது இந்த இடம். சேதுக் கடற்கரையில் ஸ்ரீராம தூதனான அனுமன் தென் திசையை நோக்கி அபய ஹஸ்தத்துடன், பக்தர்பால் அருட்பார்வையுடன் சிறு திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.
திருப்புல்லானி, சேதுக்கரை, தேவிபட்டினம் முதலான திருத்தலங்களுக்குப் பக்தர்கள் பெருவாரியாக வருவதன் ரகசியம், குழந்தைப் பேற்றுக்காக மட்டுமன்று; பெருமாளிடம் சரணாகதி அடைந்து தங்கள் குறைகளைப் போக்கிக்கொள்ளவும்தான்.

No comments:

Post a Comment