எட்ஜ் நோட் (Edge Node)
ஸ்மார்ட்ஃபோன் காலி! இனி எல்லாம் எட்ஜ் நோட் (Edge Node) மயம்!
செயலிகள் (Apps) அற்ற, இயங்குதளங்கள் (Operating Systems) அற்ற, இடைவிடாத ஸ்க்ரோலிங் தொல்லைகளற்ற உலகத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட "ஸ்மார்ட்போன்" மறையத் துவங்கி விட்டது. அதற்குப் பதிலாக நம் கைகளில் எட்ஜ் நோட் (Edge Node) வரப்போகிறது.
எட்ஜ் நோட் என்றால் என்ன?
தூரத்திலிருக்கும் ஒரு சர்வர் நம் கோரிக்கையைச் செயல்படுத்தும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நம் கையில் உள்ள சாதனமே இனி ஒரு சிறிய "மினிகம்ப்யூட்டர்" போலாகிவிடும். (Raspberry Pi போன்ற ஹார்டுவேர் மூலம் இயங்குவது). இது தரவுகளை அது உருவாகும் இடத்திலேயே உடனுக்குடன் கையாளும். 5G தொழில்நுட்பம் இதன் நரம்பு மண்டலம் போலச் செயல்படுவதால், மின்னல் வேகத்தில் வேலை செய்யும். இதற்கு எந்தவொரு "மனித இடைமுகமும்" (No Human Interface) தேவையில்லை. அதாவது நீங்கள் ஒவ்வொரு முறையும் "Approve" அல்லது "Open" என்று கிளிக் செய்ய வேண்டியதில்லை. அதுவே தானாகச் செயல்படும்.
தற்போதுள்ள ஸ்மார்ட்போனுக்கும் (Smartphone), வருங்கால எட்ஜ் நோட் (Edge Node) தொழில்நுட்பத்திற்கும் இடையிலான முக்கிய வித்தியாசத்தை இரண்டு புள்ளிகள் மூலம் விளக்கலாம்.
முதலாவதாக, செயல்பாட்டுத் தன்னாட்சி (Local Autonomy). இன்றைய ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் "கிளவுட்" (Cloud) எனப்படும் தொலைதூர சர்வருடனேயே இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, நீங்கள் 'Siri' அல்லது 'Google Assistant'-இடம் ஒரு கேள்வி கேட்டால், உங்கள் குரல் இன்டர்நெட் வழியாக எங்கோ இருக்கும் ஒரு பெரிய கம்ப்யூட்டருக்குச் சென்று, அங்குப் பதில் உருவான பிறகே உங்கள் போனுக்குத் திரும்பும். ஆனால், எட்ஜ் நோட் என்பது அதன் சொந்த "மூளையை" (Processor) உள்ளேயே வைத்திருக்கும். இது இன்டர்நெட் இல்லையென்றாலும், தகவல்களைத் தன்னிச்சையாகவும் உடனடியாகவும் அந்த இடத்திலேயே கையாளும்.
