Friday, April 8, 2022

முதுமை + தனிமை = கொடுமை

 முதுமை + தனிமை = கொடுமை

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* 

 

*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* 

 

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

 

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

 

*இங்குதான் விளையாடுவாள்...*

 

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

 

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

 

*என்ன சமைப்பது?...*

 

*என்ன சாப்பிடுவது?...* 

 

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

 

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

 

*தனிமை... வெறுமை...*

 

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

 

*பயணம் ஒரு கொடுமை...*

 

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* 

 

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

 

*ஓலாவும், ஊபரும்...*

நமக்கு தேவைப்படும் நேரத்தில்

*பீக் hour சார்ஜ்*

போட்டு களைப்படைய

செய்கின்றனர்...

 

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

 

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

 

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

 

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

 

 

இவை வேண்டாமென ஒதுங்கி...

 

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

 

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*

என்றால்...

 

அந்த நேரம் அவர்கள்...

 

*ஏதோ ஒரு மாலில்...*

 

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

 

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

 

*பிசியாக இருப்பார்கள்...* 

 

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

 

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

 

*நாலு நாள் கழித்து...*

 

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

 

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

 

*அவர்கள் டைமிற்கு...*

 

*நம் தூக்க நேரம்...*

 

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

 

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

 

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.* 

 

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

 

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

 

*அவன் வெளியே விளையாடறான்...* 

 

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

 

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

 

*யோகா போயிருக்கான்...*

 

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

 

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

 

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

 

*ஓடி விடும்...*

 

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

 

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

 

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

 

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

 

*இந்த அரசியல்களும்...*

 

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...* 

 

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை  இல்லமாகிப் போனது...*

 

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

 

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

 

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

 

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

 

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*

( மனதுக்குள் *ஏதோ...*)

*வாழ்கிறேன்!*

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

- படித்ததில் நெஞ்சு வலித்தது




No comments:

Post a Comment