Friday, January 12, 2024

கோழிக்குஞ்சுவின் சந்தேகம்

 

கோழிக்குஞ்சுவின் சந்தேகம்

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது.

ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் இருக்கின்றன?

கோபால்.

முருகன்.

பழனிச்சாமி

மாயாண்டி

முருகேசன்.

ஆனால் நமக்கு மட்டும் "கோழி" என்ற ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள்.

அதற்கு தாய்கோழி :

மனிதர்களுக்கு பல பெயர்கள் உள்ளன.

ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு ஒரே பெயர் " பிணம் "

ஆனால் நாம் செத்தபிறகு நமக்கு பல பெயர்கள் :

சிக்கன் 65.

சிக்கன் புலாவ்

சில்லி சிக்கன்

சிக்கன் வறுவல்

சிக்கன் தந்தூரி

கார்லிக் சிக்கன்

ஜிஞ்சேர் சிக்கன்

பெப்பேர் சிக்கன்....

பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்..

No comments:

Post a Comment