Sunday, August 24, 2025

நேதாஜி பற்றி ஒரு பார்வை

 



நேதாஜி பற்றி ஒரு பார்வை
நேதாஜி இந்தியர்களின் ஆயுத கையாளுமையை உலகறிய செய்தவர் இந்தியாவுக்கென முதல் ராணுவத்தை கட்டமைத்தவர் . காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர் தனது மரணத்தையே உலகத்துக்கு மர்மமாக்கியவர் .

1897
ஆம் வருடம் ஜனவரி 23 ஆம் தேதி ஜானகி நாத் போஸ் , பிராபாவதி தேவி ( இவர் ' தத் ' என்னும் பிரபு வழி பாரம்பரியத்திலிருந்து வந்தவர் ) தம்பதியருக்கு 9 வது மகனாக பிறந்தார் ( மொத்தம் 14 குழந்தைகள் ) . கல்கத்தா மாநில கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை சொன்னதால் பேராசிரியர் ஓடென் என்பவரை தாக்கினார் போஸ் . அதற்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார் சுதந்திர வேட்கைக்கான முதல் படி அது .

லண்டனில் . சி . எஸ் . தேர்வு எழுத சென்று திரும்பிய போஸ் " லண்டனில் எனக்கு கிடைத்த ஒரே சந்தோசம் என்ன தெரியுமா ? வெள்ளைக்கார சேவகன் எனது ஷூக்களுக்கு பாலிஸ் போட்டுக் கொடுத்தான் . அது ஒரு அற்ப மகிழ்ச்சியை கொடுத்தது . மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு , கட்டுப்பாடு ஆகியவை எனக்கு பாடமாக அமைந்தன " என்றுக் கூறினார் .

தேர்வில் வெற்றிப்பெற்று லண்டனில் பணியாற்றிய போதுதான் ' ஜாலியன் வாலாபாக் படுகொலை ' அரங்கேறியது . அது அவருடைய விடுதலை வேட்கையை தூண்டியதால் 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார். சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் வழி காட்டுதலில் போஸ் காங்கிரசில் சேர்ந்தார் . அவரையே தனது குருவாக பாவித்தார் . " நீ எனக்கு இரத்தத்தைக் கொடு ; நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன் ! " என்று அவர் உரத்து கூறிய பின்பு தான் இளைஞர்கள் பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற முன்வந்தனர் . 1938 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது " நான் தீவிரவாதி தான் ; எல்லாம் கிடைக்க வேண்டும் , அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனதுக் கொள்கை " என்று முழக்கம் இட்டார் . காங்கிரஸ் தலைவரானதும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்தி நிகேதனுக்கு அழைத்து பாராட்டுவிழா நடத்தி போஸுக்கு நேதாஜி என்ற பட்டத்தை வழங்கினார் ( நேதாஜி என்றால்
'
மரியாதைக்குரிய தலைவர் ' என்று அர்த்தம் ).

1939
ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் . அவரது போர்க்குணம் பிடிக்காத காந்தி நேதாஜிக்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தையும் , நேருவையும் போட்டியிட சொன்னார் . ஆனால் அவர்கள் மறுக்கவே , பட்டாபி சீதா ராமைய்யாவை நிறுத்தினார் . ஆனால் அப்போட்டியில் நேதாஜி வெற்றிப்பெற்றார் . பட்டாபி சீதா ராமைய்யாவின் தோல்வி தமக்கு பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார் . காந்தியை சமாதானப் படுத்த வேண்டி நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார் .

பிரிட்டிஷாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி 1941 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று தப்பித்து பெஷாவர் வழியே காபூல் மற்றும் கைபர் கணவாய் வழியே நடைப்பயணமாகவே ஆப்கானிஸ்தானை அடைந்தார் . இப்படி 71 நாட்கள் நடந்து இறுதியில் பெர்லின் சென்றடைந்தார் . இதை வரலாற்று ஆசிரியர்கள் "GREAT ESCAPE " என்று வியந்து பாராட்டுகிறார்கள்...
1934
ஆம் ஆண்டு ஆஸ்திரிய பெண்மணி எமிலி ஷெங்கலை காதலித்து மணம் புரிந்தார் . அதற்கு சாட்சியாக பிறந்தவர் தான் அனிதா .

"
இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஸ் சந்திரபோஸ் பேசுகிறேன் " இப்படித் தான் நேதாஜியின் முதல் வானொலி உரை துவங்கியது . 1941 ஆம் ஆண்டு ஆசாத் ஹிந்த் வானொலியில் உரையாற்றும் போது தான் முதன்முதலாக காந்தியை ' தேசப்பிதா ' என்று இந்தியாவிற்கு அறிமுகம் செய்தார் . நேதாஜி காந்தியை தேசப்பிதா என்று அழைத்ததுப் போலவே காந்தியும் நேதாஜியை ' தேச பக்தர்களின் பக்தர் ' என்று அழைத்தார்.

மோகன் சிங் என்பவரால் 1942 ஆம் வருடம் சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது . அது ஜப்பானிய படைகளால் சிதைக்கப்பட்டது . மீண்டும் 1943 ஆம் ஆண்டு நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் கட்டமைக்கப்பட்டது . " ஜெய் ஹிந்த் " அதாவது " வெல்க பாரதம் " என்ற சொல்லை தாரக மந்திரமாக்கினார் நேதாஜி . அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் என்னும் தமிழர் . நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600 - க்கும் மேல் தமிழர்கள் இருந்தார்கள் . நேதாஜி "அடுத்தப் பிறவியில் ஒரு தமிழனாக பிறக்கவேண்டும் " என்று ஆசைப்படுகிறேன் என்று நெகிழ்ந்தார் . பெண்களை ராணுவத்தில் பங்கேற்க வைத்தார் . அவர்களை சத்திவாய்ந்த துர்க்கைக்கு நிகராக பாவித்தார் .

1943
ஆம் ஆண்டு நேதாஜியின் படை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றியது .அந்த தீவுகளுக்கு ஷாஹீத் (தியாகம்) , ஸ்வராஜ் (சுயராஜ்ஜியம்) என்று பெயர் மாற்றினார் . அத்தீவுகளுக்கு கர்னல் லோகநாதன் என்ற ஒரு தமிழரை தான் ஆளுநராக நியமித்தார் .

1945
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல தன் தோழர் ஹபீப் உடன் விமானத்தில் ஏறினார் . ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் விபத்து ஏற்பட்டு இறந்தார் என்று சொல்லப்படுகிறது , ஆனால் தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று கூறுகிறது . இது வரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமே !!! .

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும் , அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன . அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970 களில் இறந்து விட்டதாகவும் , அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன . 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது . இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன் , நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது . ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை

 


No comments:

Post a Comment