Thursday, August 28, 2025

பத்திரப் பதிவுகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

 பத்திரப் பதிவுகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.


         போலி ஆவணங்கள் மூலம் கிரயம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகள் செல்லாது என அறிவித்து உரியவர்களிடம் சொத்துகளை ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் செல்லாம் பத்திரப்பதிவுத் துறையே முடிவுகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

         இந்த சட்டம் உடனடியாக நடை முறைக்கு வந்து விட்டது பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்கலாம்!

       நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகளை பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் -

W. P. No - 24839/2014, dt - 16.7.2018

W. P. No - 491/2012, dt - 4.6.2014

W. P. No - 16294/2012, dt - 4.4.2014

 

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால் அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.

மற்றவர்களுக்குப் பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

 

3. கிராம அலுவலர்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் கிராம அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

 

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

 

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015

மதுரை உயர்நீதிமன்றம்

 

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.

பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012

S. A. No - 1715/1989, dt - 25.6.2002

W. P. No - 16294/2012, dt - 3.4.2014

 

7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். Madras High Court

W. P. No - 18754, 20304, 2613/2005

DT - 4.11.2013 A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)

The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan

2012 - 2 - CTC – 315

 

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய

நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்குத் தண்டம் விதிக்கப்படும்.

W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)

 

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். W. P. No - 11279/2015,

dt - 22.3.2019, madurai high court

 

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு.

வருவாய் கோட்ட ஆட்சியர் பட்டா மாற்றம் செய்ய முடியாது ஆனால் கோட்ட ஆட்சியர் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO 2012 - 3 - CTC - 823 அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

சிறப்பு அரசு பொது வழக்கறிஞர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம். திருப்பத்தூர்.

யாம் பெற்ற செய்தி பிறருக்கும் பயன் தர பகிர்கிறேன்

 

No comments:

Post a Comment