மனம் கலங்காதிருக்க.
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...
*எப்படி முடிந்தது இவர்களால்..?* ரகசியம்...
*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...* ஒரு இறை சக்தி எப்பொழுதும் நம்மை கூடவே வழிநடத்துகிறது என்று உணர எது வழி தெரியுமா?
*ஆழ்ந்த நம்பிக்கை...* அந்த நம்பிக்கை ஏற்பட வழி..? *முதல் வழி...*
சொல்லறிவு
நம் சித்தர்கள், ஞானிகள், மற்றும் சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொண்டு பின்பற்றுதல்...
*இரண்டாம் வழி...*
சுய அறிவு
மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, வாழும் பொழுது , உண்மை விளங்கும் போது , மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...
ஆழ்ந்த நம்பிக்கை. ..
நம்பிக்கை ஏற்பட்ட பின்... மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் வகையில் தொடந்து செய்யப்படும் பயிற்சி முறைகள்...
அந்த பயிற்சிகள்...
*பூரணத்துவமாக இருக்கலாம்...* *சித்த யோக நெறிகளாக கூட இருக்கலாம் **பூரண பக்தி மார்க்கமாக இருக்கலாம்...* மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."*
*ஒருங்குவித்தல், ஸ்ரத்தை, பொறுப்பு, வளப்படுத்துதல்* எனும் நான்கு தத்துவங்களாகவும் இருக்கலாம். இவற்றை மாறாமல் கடைபிடித்தால்... வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்... என்ன நடத்தாலும், எதை இழந்தாலும், *"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*
அந்த ஆத்ம பலமே... எதையும் தாங்கும் சக்தி... ஆதலால் ... "சிவத்துவமசி என்ற உணர்வுடன் வாழ்வோம் "
*அன்பே கடவுள் என போற்றுவோம்...* உறுதியுடன் உண்மையாக இருப்போம்...* இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

No comments:
Post a Comment