Monday, December 22, 2025

மனம் கலங்காதிருக்க.

 மனம் கலங்காதிருக்க.



 தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

 சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும்

*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

 பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

 உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

 அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

 இளம் விதவையான சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

 தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் *குசேலர்* மனம் கலங்கவில்லை...

 ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

 பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

 மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

 கணவன்  கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

 இருகைகளையும் வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

 கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் *ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

 மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் *சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

 பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் *பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

 கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும் *தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

 நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் *மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

 சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் *கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?* ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...* ஒரு இறை சக்தி எப்பொழுதும் நம்மை கூடவே வழிநடத்துகிறது என்று உணர எது வழி தெரியுமா?

*ஆழ்ந்த நம்பிக்கை...* அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?  *முதல் வழி...*

சொல்லறிவு

நம் சித்தர்கள், ஞானிகள், மற்றும் சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொண்டு பின்பற்றுதல்...

*இரண்டாம் வழி...*

சுய அறிவு

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, வாழும் பொழுது , உண்மை விளங்கும் போது , மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

ஆழ்ந்த நம்பிக்கை. ..

நம்பிக்கை ஏற்பட்ட பின்... மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் வகையில் தொடந்து செய்யப்படும் பயிற்சி முறைகள்...

அந்த பயிற்சிகள்...

*பூரணத்துவமாக இருக்கலாம்...*  *சித்த யோக நெறிகளாக கூட இருக்கலாம் **பூரண பக்தி மார்க்கமாக இருக்கலாம்...*  மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."*

*ஒருங்குவித்தல், ஸ்ரத்தை, பொறுப்பு, வளப்படுத்துதல்* எனும் நான்கு தத்துவங்களாகவும் இருக்கலாம். இவற்றை மாறாமல் கடைபிடித்தால்... வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்... என்ன நடத்தாலும்,  எதை இழந்தாலும்,  *"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...  எதையும் தாங்கும் சக்தி...  ஆதலால் ...  "சிவத்துவமசி என்ற உணர்வுடன் வாழ்வோம் "

*அன்பே கடவுள் என போற்றுவோம்...* உறுதியுடன் உண்மையாக இருப்போம்...* இதனால் பெற்றிடுவோம்...

மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

No comments:

Post a Comment