Sunday, February 1, 2026

பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு

 பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு

தொடர்பு எண் - 080 47104600

மனித உயிர்களுக்கு *ஆபரேசன்* பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி, "கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை?" என்று குழம்பாமல்,

*பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு* எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.

அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு அது சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு வரிசைப்படி உங்களுக்கு "அப்பாயின்ட்மென்ட்" செய்து உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.

அதன் விபரப்படி, நோய்வாய்ப்பட்டவருடன் ஒரு "அட்டண்டர்" மட்டுமே கேட்டில் அனுமதிப்பார்கள்.

அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான *மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை* கிடைக்கும்.

ஆன்மிக அமானுஷ்யங்கள்

 பலரும் அறியாத ஆன்மிக அமானுஷ்யங்கள்......

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

முதுமையை கொண்டாடுங்கள்

 முதுமையை கொண்டாடுங்கள்

முதுமையில் தனித்து விடப்படாமல்,எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க,  இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்

 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்!பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள், நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில்,நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்!

 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.

பக்தி புரியவேயில்லை மாறுகிறது

 பக்தி புரியவேயில்லை மாறுகிறது



             முன்னாடியெல்லாம் கோவிலுக்கு போகும் போது அவ்வளவா கூட்டம் இருக்காது ஓரளவுக்கு இருக்கும் ஆனால் இப்ப சில வருடங்களாக எந்த கோவிலுக்கும் போக முடியல.. சமயபுரத்துக்கு உள்ளே நுழையவே முடியல திருச்செந்தூர் அளவில்லா கூட்டம் திருவண்ணாமலை அளவில்லா கூட்டம். மக்கள் தொகை கூடிருச்சா இல்லை பக்தி கூடிருச்சான்னு தெரியல.. முக்கியமா சண்டை நிறைய நடக்குது பக்தர்களே அடிச்சிக்கிட்டு சாகுறாங்க... க்யூ பெரிசா இருப்பதால் பலர் மயங்கி விழுந்து சாகுறாங்க.. கடவுளை பார்க்க கட்டணங்கள் அதிகமா இருக்கு இது எங்க போய் முடியுமுன்னே தெரியலங்க எல்லாருக்கும் அந்த சாமிதான் நல்ல புத்தி கொடுக்கனும்...

             பக்தியா போறாங்களான்னு தெரியல ஏன்னா வழி நெடுக தின்னுகிட்டே பேசிகிட்டே போகுதுங்க என்னவோ பொருட்காட்சிக்கு போற மாதிரி.. தவறனான வழிகாட்டுதல் தவறான பரிகாரங்கள் வேண்டுதல்கள் என யூடியூப்பில் நாளோரு கிழமை நாளோரு செய்தியின்னு தீயா பரவுது. உண்மையா பொய்யான்னு யாரும் யோசிக்கிறது இல்லை.. விளக்கில் விளக்கு போடுவோம் எலுமிச்சை பழத்தில் போடுவோம்.. இப்ப தேங்காய், வாழைப்பழம், பரங்கிக்காய், ன்னு என்னென்ன விளக்கோ போடுறாங்க இதெல்லாம் யாரு கொளுத்திப் போடுறாங்கன்னே தெரியல சாமிய கூட நிம்மதியா கும்பிட முடியல கோவிலுக்கு போற எண்ணம் வர மாட்டேங்குது...

              என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனையா இல்லை மனுசனுக்கு வந்து சோதனையான்னு ஒரே குழப்பமா இருக்கு. விரத முறையெல்லாம் கைவிட்டுட்டு புதுசா கண்டுபிடிச்சு என்னென்னவோ செய்யுதுங்க... நேற்று மாட்டுப் பொங்கல் நம் முன்னோர்களுக்கு கறி, கருவாடு, நண்டு, மீன் தானே சமைத்து படையல் போடுவோம் ஆனால் இப்ப பல வீடியோக்களில் பார்த்தேன் பிரியாணி செய்து படையல் போடுகிறார்கள்.. ஹா..ஹா.... இனிமேல் படையலில் பிரியாணியும் சேரும் போல... எது போட்டா என்ன நமக்கு பிடிச்சதை செய்ய வேண்டியதுதான்.. எல்லாமே மாறுகிறது நாமும் மாறனுமா தெரியல..