Saturday, November 14, 2020

சஷ்டி விரதம்

 


சஷ்டி விரதம் எப்போது..?

            கார்த்திகை மாதம் வளர்ப்பிறையில் வரக்கூடிய சஷ்டி மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. அந்த நாளை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விரதம் இருப்பதும் சூரசம்ஹாரப் பெருவிழாவுடன் இந்த விரதம் நிறைவடையும். இந்த சஷ்டி விரதம் சிறப்பாக நடக்கும் திருச்செந்தூர் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2வது படை வீடாகும்.

சஷ்டி சிறப்பு

            குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். கந்த சஷ்டி திருநாள் ஒவ்வொரு மாதமும் வளர் பிறை தேய்பிறைகளில் சஷ்டி திதி வருவது வழக்கம். அப்படி கார்த்திகை மாதத்தி வரும் வளர்பிறை சஷ்டிக்கு மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்


குழந்தை வரத்திற்கான சஷ்டி விரதம்...

         குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம். ஆனால் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிற் மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக விசேஷமானது. அப்போது குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இருவரும் சேர்ந்து விரதம் இருப்பது நல்லது. கோயிலிலோ அல்லது வீட்டிலிருந்து கூட விரதம் இருக்கலாம். விரதம் இருக்கும் அன்பர்கள் தங்களின் உடல் நிலையை கருத்தில் கொள்வது அவசியம். மருத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களும், உடல் நல பிரச்னை உள்ளவர்கள் இந்த தீவிர விரதத்தை யோசித்து முடிவு செய்யவும்.

சஷ்டி விரதம் வீட்டில் இருப்பது எப்படி...?

கோயிலில் இருக்க என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் தெரியுமா?

குழந்தை வேண்டும் தம்பதியர், வேலையில் இருந்தாலும், நாம் அலுவலகத்தில் கூட விரதம் இருக்கலாம். காலையில் எழுந்து குளித்து முருகனுக்கு பூஜை செய்து உங்களின் விரதத்தை தொடங்கலாம்  கந்த சஷ்டி விரதம் ஏற்கும் பக்தர்கள் பல வகைகளில் விரதம் இருப்பதுண்டு. சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்தும், சிலர் பால் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளும் முறைகள் உண்டு. சூர சம்ஹார நிகழ்வு முடியும் வரை விரதம் இருப்பதும், பின்னர் சுவாமி தரிசனம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

 

எங்கு விரதம் இருக்கலாம்?

வீட்டில் கூட சஷ்டி விரதம் இருக்கலாம் அல்லது முருகனின் ஆறுபடை வீடு கோயிலில் சென்று இருக்கலாம்.

விரதத்தின் போது செய்ய வேண்டியது...

பக்தர்கள் விரதத்தின் போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் உள்ளிட்டவை படித்து முருகனின் அருளைப் பெறலாம்.
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

ஓம் முருகா சரணம் சரணம்
ஓம் முருகா சரணம் சரணம்
ஓம் முருகா சரணம் சரணம்

No comments:

Post a Comment