Monday, November 9, 2020

டி. எம். செளந்தரராஜன்

 டி. எம். எஸ்


                         தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!


டி. எம். எஸ். என்பதில் உள்ளஎஸ்என்றால் செளந்தரராஜன், ‘எம்என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்டிஎன்பது அவரின் குடும்பப் பெயர்தொகுளுவா’. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!
டி. எம். எஸ் ¤க்கு டி. எம். எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே. பி. சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார்தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி. எம். எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.


டி. எம். எஸ்ஸின் முதல் பாடல்ராதே என்னை விட்டு ஓடாதேடிஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்.


டி. எம். செளந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்


மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேசங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடுவார்


டி. எம். எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’, ‘உள்ளம் உருகுதய்யா முருகா’, ‘சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!


டி. எம். எஸ். இசையமைத்துப் பாடியகற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பந்தியிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம்பெறும். அந்தந்தப் பந்தியை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!


அடிமைப் பெண்படத்தின் போதுதான் டி. எம். எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். ‘பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்என்று எம். ஜி. ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி. எம். எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ். பி. பாலசுப்பிரமணியமுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். ‘ஆயிரம் நிலவே வா


பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். ‘இல்லாட்டி ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! பாவம் டி. எம். எஸ் எம்க்கு என்ன கஷ்டமோன்னு உச்சுக் கொட்டுவான். அதனால், இந்த வெளிவேஷம் தேவையா இருக்குஎன்பார்!


கவிஞர் வாலியைத் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி. எம். எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல்இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி. எம். எஸ். போட்டதுஎன்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!


நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜன கண மனஎன்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில் டி. எம். எஸ்சும் பி. சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!


தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி. எம். எஸ்க்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும் போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி. எம். எஸ்.


வசந்தமாளிகைபடத்தில் வரும்யாருக்காகபாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். ‘அதெல்லாம் வீண் வேலைஎன்று தயாரிப்பாளர் மறுத்துவிடஎக்கோ எஃபெக்ட்வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது, ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்.


வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல்யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவுகனத்த குரலுடைய டி. எம். எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி. எம். எஸ்.!


காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி. எம். எஸ். இவரது வீட்டுக்கு பகவான் சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி. எம். எஸ்ஸைகற்பகவல்லிபாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!


கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி. எம். எஸ். கண்ணதாசன் எழுதியகடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர்சாக வேண்டும்என்பதைவாடவேண்டும்என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!


நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி. எம். எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக, இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார்நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!


எம். ஜி. ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகிவர்

பாகப் பிரிவினைபடத்தில் 100 வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி. எம். எஸ். விழாவில்கடவுள் வாழ்த்துபாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


நவராத்திரிபடத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாசமான வேடங்களுக்கும் ஏற்ப தன் குரலை வித்யாசப்படுத்திப் பாடியிருப்பார் டி. எம். எஸ்பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்


தமிழில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.) சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி. எம். எஸ்க்கு எதுவும் இல்லை.


No comments:

Post a Comment