தமிழர்அதிகமாக வாழும் ரியூனியன்
தமிழ் நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்!சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீயூனியன் என்கிற தீவு,
ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே - இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில்இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும்இடங்களில் ஒன்று – இந்த ரீயூனியன்தீவு…!!!
சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ளமொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம் பேர்கள் அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….!!!
இவர்களே முதன்மையானவர்கள்…!!! பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம்ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி,காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்ததமிழர்கள் அப்போதைய நாட்களில்ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீயூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப் பட்டார்கள்.
அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ளஒரே வேண்டுகோள் - அவர்களுக்கு தமிழும்,இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தரதாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பதுதான் !!
ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும்8ந்தேதிக்கு இடைப்பட்ட 24 மணிநேரங்களில்,இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலக ரிக்கார்டு -இதுவரை முறியடிக்கப்படவில்லை
நன்றி நட்புடன் வெ.பழனியப்பன்

No comments:
Post a Comment