Saturday, February 28, 2026

சகுன சாஸ்திரம்

சகுன சாஸ்திரம்

பூ விழுதல் முதல் பல்லி சத்தம் வரைஆன்மீக அறிகுறிகளும் பலன்களும்!

இந்த உலகில் பல விஷயங்கள் கண்களுக்கு தெரியாமல் மனதில் நம்பிக்கையை விதைக்கின்றன. அவற்றில் ஒன்றுசகுனம்.

ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கும் முன்,

திருமணம் நடைபெற வேண்டும்,

குழந்தை பாக்கியம் வேண்டும்,

வேலை கிடைக்க வேண்டும்,

நோய் நீங்க வேண்டும்

இவ்வாறான எண்ணங்களுடன் நாம் மிகவும் நம்பிக்கை கொண்ட கோவிலுக்கு சென்று, சன்னதியில் அமர்ந்து மனமுருகி வேண்டுகிறோம்.

அப்போது நிகழும் சில சிறிய சம்பவங்கள்சாதாரணம் போல தோன்றினாலும், பக்தி மனதில் அவைதெய்வீக அறிகுறிஆக மாறுகின்றன.

ஆனால் ஒரு முக்கியமான விஷயம்:

 தீபாராதனை நடைபெறும் போது கண்களை மூடாமல் திறந்து வைத்து இறைவனை தரிசிக்க வேண்டும். முதலில் தரிசனம்; பின்னர் தான் வேண்டுதல் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆகம மரபு கூறுகிறது.

இப்போது, கோவிலில் அல்லது வீட்டில் பூஜை செய்யும் போது காணப்படும் முக்கியமான நல்ல சகுனங்களை விரிவாக பார்ப்போம்.

 1. பூ விழுதல்தெய்வீக சம்மதம்

சாமி சன்னதியில் ஆராதனை நடைபெறும் போது, திடீரென சிலையிலிருந்து பூ கீழே விழுவது மிக மங்களகரமான அறிகுறி என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது.

பூக்கள் என்பது அர்ப்பணிப்பு.

அந்தப் பூ கீழே விழுவது

உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதுஎன்ற தெய்வீக சின்னமாக கருதப்படுகிறது.

 வலது பக்கம் விழுந்தால்:

மிகச் சிறப்பு.

இதுமுழு சம்மதம்கிடைத்தது, காரியம் விரைவில் ஜெயமாகும் என்ற நம்பிக்கை.

 இடது பக்கம் விழுந்தாலும்:

அதுவும் நல்லதே.

அவசரம் வேண்டாம்; ஆனால் காரியம் நடைபெறும் என்று பொருள்.

பக்தி உள்ளவர்களுக்கு இது மிகுந்த மன உறுதியை தரும்.

தர்ப்பை holy grass

 தர்ப்பை   holy grass




இதை ஹோம சடங்குகளில் பார்த்து இருப்போம்.. இதன் உபயோகம் நிறைய இருக்கிறதுஅதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்..
இது ஒரு தெய்வீகமான மூலிகை ஆகும் நீரில்லாமழும் வளரும் தன்மை கொண்டது
இதில் மூன்று வகையான தர்ப்பை இருக்கிறது  நுனி பகுதி பெரியதாக இருந்தால் பெண் தர்ப்பை மேலிருந்து ஒரே சீராக இருந்தால் ஆண் தர்ப்பை அடிப்பகுதி பெரியதாக இருந்தால் அலி தர்ப்பை என்று சொல்லப்படுகிறது

ஆண் தர்ப்பை உபயோகிப்பது மிக நல்லது..

இந்த புல்லை ஊறுகாய் போட்டு வைத்தால் கெடாமல் நீண்ட காலம் இருக்கும்

இதை கட்டுகளில் இருந்து உருவும் போது அடி பகுதிகளில் இருந்து தான் உருவ வேண்டும்..

தர்ப்பை புல் நாட்டு மருந்து கடைகளில் பூஜா ஸ்டோரில் கிடைக்கும் 108 தர்ப்பை அடங்கிய தர்ப்பை கட்டை வாங்கி வந்து  சிகப்பு நூலில் அடி பாகத்தில் கட்டி எட்டு முடிச்சு போட்டு தலைவாசலில். நுனி பகுதி வடக்கு பக்கம் பார்த்து இல்லை கிழக்கு பக்கம் பார்த்து இருக்க வேண்டும்  இப்படி கட்டி வைத்தால் வீட்டில் உள்ள பாஸிட்டிவ் நெகடிவ் எனர்ஜிகளை சம நிலை படுத்தி சகல சந்தோஷங்களையும்வீட்டிற்குள் அழைத்து வந்து விடும் பிரான சக்தியை அதிகரிக்கிறது.. செல்வவளம் அதிகரிக்கும்..  சனி தோஷங்களை நீக்க பயன்படுகிறது
.
தர்ப்பையில் அடி பாகத்தில் மகாவிஷ்ணு நடு பாகத்தில் பிரம்மா நுனி பாகத்தில் சிவனும் வசிப்பதாக சொல்ல படுகிறது..

திதி கொடுக்கும் நாட்களில் ஹோமம் நடத்தும் போது இந்த புல்லை நம் மோதிர விரலில் கட்டி விடுவார்கள் எதற்காக தெரியுமா ஆகாயத்தில் உள்ள பாஸிட்டிவ் எனர்ஜிகளை மோதிர விரல் வழியாக நம் இடது பக்க மூளைக்கு சென்று நல்ல விஷயங்களை நாம் மூளைக்குள் உருவாக்கும் வெற்றிக்கு வழிகாட்டும்..

இந்த புல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குடி நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சூடு தணியும் சுகர் குறையும்.. உடல் வலுவடையும் புத்தி கூர்மை தரும்.இரத்தம் சுத்தமாகும் .. உடல் எடை குறையும்..

வயிற்றில் புண் வாயில் புண் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு உடல் சோர்வாக இருப்பவர்கள் இந்த புல் போட்டு கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் சரியாகும்..

இந்த புல்லில் பாய் செய்து அதில் படுத்து வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் நீங்கும் டையாலிஸ் செய்வது நாளடைவில் நீங்கும். நன்றாக தூக்கம் வரும் நமது உடலில் கெட்ட சக்திகளை அகற்றும்..மன உளைச்சல் நீங்கும் இதில் உட்கார்ந்து தியானம் செய்ய சீக்கிரம் தியான நிலைக்கு செல்லலாம்..

வீட்டில் அடிக்கடி எதாவது பிரச்சினை சண்டை சச்சரவு என்று இருந்தால் மஞ்சள் கலந்த நீரை தர்ப்பை புல்லில் தொட்டு வீடு முழுக்க தெளிக்க பிரச்சினை சரியாகும்...

வீட்டில் தெய்வ சக்தியை வரவழைக்க தர்ப்பை புல்லில் பச்சை கற்பூரம் தடவி வீட்டின் நாலு பக்கமும் போட்டு வைக்கலாம் இல்லை வெள்ளி கிழமை பச்சை கற்பூரம் தர்ப்பையில்  தடவி தூபம் போடலாம்..
இந்த புல்லை ஒரே சீராக மடித்து ஒரு தாயத்தினுள் வைத்து அதில் சுத்தமான பசுஞ்சான விபூதியை நிரப்பி மூடி வைத்து ஒரு அமாவாசை தினத்தன்று சிவன் கோவிலில் வைத்து கழுத்தில் அணிந்து வந்தால் உங்களுக்கு இறை சக்தி கூடும் கெட்ட சக்திகள் உங்களைஅனுகாது  என்று சொல்லப்படுகிறது

இந்த தர்ப்பையை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து  நூல் மாதிரி செய்து  அதில் பூக்கள் மற்றும் வில்வ இலைகளை சேர்த்து கட்டி சிவனுக்கு மற்றும் திருமாலுக்கும் அணிவித்து வந்தால் உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.... இது கேரளா பெண்கள் அதிகம் உபயோகிப்பார்கள்..

நம் கர்ம விணைகள் குறைய ..நாம் குளிக்கும் நீரில் தர்பை புல்லை போட்டு குளிக்க படிப்படியாக நீங்கும்..

இதை வீடுகளில் வளர்க்க வைரஸ் தடுப்புகளாக செயல் படும்..வீடு முழுக்க பாஸிட்டிவ் எனர்ஜிகளை நிரப்பும்..

இது திருநல்லாறு தர்பனேஸவரர் ஆலயத்தில் தல விருட்சமாக உள்ளது...