பார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது. இந்த நிலை மாறும்
Followers
Sunday, October 15, 2017
சளி, இருமலைத் துரத்தும் மிளகு!
பத்து மிளகு இருந்தால் பகைவன்
வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக
கூறப்பட்ட பழமொழி இது! * சளி
பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன்
50 மில்லி பாலுடன் அதே அளவு
தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப் போட்டு
நன்றாக வேக வைக்க வேண்டும்.
பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன்
தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ
சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி
விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை
இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல்
தீரும். * வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன்
தேன் கலந்து சாப்பிட்டால் பலன்
கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி
இலையையும் 200 மில்லி நீரில் போட்டு
கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக்
குடிக்க, நிவாரணம் கிடைக்கும். * ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும்
வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று
தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி
கிடைக்கும். * தேள், பூரான் மற்றும்
விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன
காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம்
தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ
வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று
தின்றால் விஷம் முறிந்துவிடும். * மூக்கடைப்பு
ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு
அதன் புகையை சுவாசித்தால் அடுத்த
நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி
சுவாசிக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment