Thursday, October 15, 2020

கண்ணனின் மனைவிகள்‎


  -  இலக்குமணை

    -   ‌‌த்தியபாமா

- நக்னசித்தி             -   நப்பின்னை

  -  பத்திரை (கண்ணன் தேவி)

  -  மித்திரவிந்தை

  -  ராதை       -   ருக்மணி

  -  ஜாம்பவதி

 

 

இலக்குமணை

        இலக்குமணை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் எட்டாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது

வீணை வாசிப்பதில் வல்லவரான   பிருகத்சேனரின் மகளாக இலக்குமனை சொல்லப்படுகின்றாள். மத்ரதேச இளவரசியாக, "மாத்திரி" என்ற பெயரில், இவள் பொதுவாகச் சுட்டப்படுகின்றாள்.

விஷ்ணு புராணம்: இலக்குமணையை "சாருகாசினி" என்றழைப்பதுடன், அவளை எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடும் போதும், "மாத்திரி" என்ற பெயரில், இன்னொருத்தியையும் சொல்கின்றது. பாகவத புராணம்: மத்திர நாட்டின் பெயர் தெரியா மன்னன் ஒருவனின் மகளாகவும், நற்குணங்கள் வாய்ந்தவளாகவும் இலக்குமணையை இனங்காட்டுகின்றது. பத்ம புராணம்: மத்திரநாட்டு மன்னனை, "பிருகத்சேனன்"' என்று அடையாளம் காட்டுகின்றது.


அரி வம்சம்: இதுவும் அவளை "சாருகாசினி என்கின்றது. எனினும் விஷ்ணு புராணம் போலவே, மத்திரநாட்டுடன் இணைக்கவில்லை. "சுபீமை" எனும் பெயருடன் வேறொருத்தியை "மாத்திரி" என்ற பெயரில் எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடுகின்றது. இலக்குமணைக்கு, அவள் தந்தை வைத்த மணத்தன்னேற்பில் கண்ணன் அவளைக் கவர்ந்துகொண்டதாக, பாகவத புராணம் விவரிக்கின்றது   இன்னொரு கதையில், ஜராசந்தன், துரியோதனன் ஆகியோரே தவறவிட்ட விற்போட்டியொன்றில் வென்று, அவளைக் கண்ணன் மாலையிட்டதாகச் சொல்லப்படுகின்றது.அப்போட்டியில் அருச்சுனன் பங்குபற்றி, வேண்டுமென்றே தோற்றுப்போனதாகவும் பீமன் போட்டியில் கலந்துகொள்ளாது தவிர்த்ததாகவும் அக்கதை நீள்கின்றதுகண்னனும் அவனது எண்மனையாட்டியரும் ஒருமுறை அத்தினாபுரம் சென்றபோது,. நாணமும் கம்பீரமும் நிறைந்த இலக்குமணை, தன்னைக் கண்ணன் மணந்த வரலாற்றை திரௌபதியிடம் விவரிக்கின்றாள்.

பிற்கால வாழ்க்கை

பாகவத புராணத்தின் படி, பிரகோசன், கத்திரவான், சிங்கன், பலன், பிரபலன், ஊர்த்துவகன், மகாசக்தி. சகன், ஓயன், அபராயிதன் என்று அவளுக்கு பத்துக் குழந்தைகள்.[ விஷ்ணு புராணம், அவளுக்கு கத்திரவான் முதலான பல மைந்தர் இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றது. கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

சத்யபாமா

         சத்யபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.  இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப் பெறுகிறார். ஒரு பெண்ணால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன் எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ‌‌த்யபாமாவிற்கு தேரோட்டியாக கிருஷ்ணன் பாரதகிருஷ்ணராக சென்று நரகாசுரனை வதம்புரிந்ததார் நரகாசுரன் பிரக்ஜோதிஷ்பூர் என்ற நாட்டை ஆண்டு கொண்டு அங்குள்ள மக்கள்களையும், பெண்களையும், தேவர்களையும், பஞ்சபூதங்களையும் தனது சர்வதிகார ஆட்சியில் கொடுமை செய்து வந்தான். இதில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்யும் முறையயை (சிவந்த பஞ்சகம்) என்றும் தமிழில் சிவந்தமண்களம் என்று கூறபடுகின்றது.

இந்த வதத்தில் நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் ஐந்து முறை முயற்சிகிறார். இதை பஞ்சவியூக முறை என்று கூறபடுகின்றது. முதலில் நரகாசுரனின் நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பலை கிருஷ்ணர் தனது அக்னி அஸ்திரத்தால் அந்த கப்பலை கடலில் கவிழ்த்துவிட்டார். அடுத்ததாக தேவர்களையும், பஞ்சபூதங்களையும் தனது வசபடுத்தி வைத்திருந்த நரகாசுரனின் இடம் இருந்து மீட்டேடுத்தார் கிருஷ்ண பரமாத்மா மேலும் நாட்டு மக்கள்களையும், பெண்களையும் அடிமைவிலங்கை நீக்க நினைத்தபோது கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை பேரழகியாக அலங்கரித்து நரகாசுரனின் முன்பு நடனம் ஆட செய்து கிருஷ்ணர் சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஆடவைத்து ஒரு அடிமை நாடகம் போல் நடத்தினார் கிருஷ்ணர். (இதனால் தான் இன்றளவும் தீபாவளி தினத்தன்று சாட்டையில் நெருப்பு வைத்து கொண்டாட படுகின்றது) இந்த நிகழ்வை கண்ட நரகாசுரன் தனது இறப்பு நேருங்கியதை கண்டு அச்சமுற்ற போதிலும் சத்யபாமாவின் அழகை கண்டு தனது நிலையயை மாற்றி கொண்டு அந்த அடிமையாக இருந்த மக்கள்களையும், பெண்களையும் விடுவித்தான்.

பின்பு போர்களத்தில் சண்டையின் போது கிருஷ்ணருக்கும்-நரகாசுரனுக்கும் போர் நடந்தபோது போர்களத்தின் பூமியே இரத்தத்தால் சிவந்து கிடந்தது. இறுதியில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவின் கையால் தான் நரகாசுரனை அழிக்க கடைசி முறையாக நரகாசுரன் அம்பு மழை பொழிதான் இதில் கிருஷ்ணர் தந்திரமாக விலகி கொண்டு அந்த அம்புகள் எல்லாம் மனைவி சத்யபாமாவை நோக்கி பாய்ந்து அவள் நெஞ்சை அம்பு குத்திவிட்டது. அந்த வலியயையும் பொருட்படுத்தாமல் அந்த அம்பினை நெஞ்சில் இருந்து இரத்தம் சிந்த எடுத்து அந்த அம்பாலயே நரகாசுரனை குத்தி வதம் செய்துவிட்டால் என்று வைணவ நூல்கள் கூறுகிறது.

 

நக்னசித்தி

நக்னசித்தி என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். சத்தியை என்றும் அழைக்கப்படும் இவள், எண்மரில் ஆறாவது ஆவாள். இவள் வரலாறு, பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

நக்னசித்தி, அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னசித்துவின் மகள் ஆவாள். சத்தியை, கோசலை என்று இவளைப் பொதுவாக அழைக்கிறது பாகவதம் முதலான நூல்கள். மகாபாரதமும், "சத்தியை" என்ற எண்மனையாட்டியரில் ஒருத்தி பற்றிக் குறிப்பிடுகின்றது இவளே தமிழ் மரபில் நப்பின்னையாக அறியப்படுகின்றாள்.

நக்னசித்து வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று, கண்னன் சத்தியையைக் கரம்பிடித்தான். அவளது மனத்தன்னேற்புக்கு வந்து தோற்றுப்போன ஏனைய இளவரசர்கள், அவர்கள் துவாரகை திரும்பும் வழியில் தாக்கும் போதும், கண்ணனின் யாதவப்படையும், அருச்சுனனும் இணைந்து, அவர்களைத் தோற்கடித்தனர்.

நக்னசித்திக்கு, வீரன், சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள். "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவளுக்கு இருந்ததாக, விஷ்ணு புராணம் சொல்கின்றது. கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

.

நப்பின்னை

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் நூல்களும் சைவத் திருமுறைகளும், வைணவப் பாசுரங்களும் குறிப்பிடும் கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக்கூத்தையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது. மிதிலை அரசனான கும்பக்கோன்  தன் காளைகளை அடக்குபவனுக்கு நப்பின்னை கிடைப்பாள் என்று அறிவித்து வைக்கும் போட்டியில் கண்ணன் கலந்துகொண்டு, ஏறுதழுவி வென்று, நப்பின்னையை மணம் புரிகின்றான்.

காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் "உபகேசி" என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள். கண்ணனின் திருவிளையாடல்களையும், தேவியரையும் பற்றிக் கூறும் பாகவதம், மகாபாரதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களிலோ, வடநாட்டு இலக்கியங்களிலோ இவள் பற்றிய குறிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை. எனினும், குறைந்தபட்சச் சான்றுகளின் அடிப்படையில், இவளை, கண்ணனின் எண்மனையாட்டியரில் ஒருத்தியான நக்னசித்தியாக இனங்காண்பதுண்டு  சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.

ஆண்டாள் தன் திருப்பாவையிலும், நம்மாழ்வார் "பின்னைமணாளன்"  (நம்மாழ்வார் பிர. என்றும், திருமழிசையாழ்வார் "பின்னைகேள்வ" (மழிசையாழ்வார் பிர.) என்றும், இன்னும் பலவிதமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பலவாறாகக் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றது.

சைவ இலக்கியங்கள்

மாணிக்கவாசகர், திருமாலை, "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்" என்றும், சுந்தரர் "பின்னை நம்பும் புயத்தான்" என்றும் பாடுகின்றனர்.

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.  எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.

 

பத்திரை

பத்திரை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஏழாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

கேகய நாட்டின் இளவரசி என்பதால், இவள் கைகேயி எனப்படுகின்றாள். திருட்டகேது மற்றும் குந்தியின் சகோதரியான சுருதகீர்த்தி ஆகியோரின் மகள் இவள்.  மணத்தன்னேற்பில் இவள் கண்ணனைத் தன் நாயகனாக வரித்துக் கொண்டாள்.

சங்கிராமசித்து, பிருகச்சேனன், சூரன், பிராகரணன், ஆர்சித்து, சயன், சுபத்திரன், வாமன், ஆயுர், சத்தியகன் என மித்திரவிந்தைக்குப் பத்து மைந்தர் என்கின்றது பாகவதம்  கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

பத்திரா கல்யாணம்

"பத்திரா கல்யாணம்" என்னும் நூல் தெலுங்கில், கலாநிதி .கே..வி.கிருஷ்ணகுமாரி என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. பத்திரையின் அழகு, காதல், அவளுக்கும் கண்ணனுக்கும் நடந்த திருமணம் என்பவற்றை அந்நூல் அழகுற வர்ணிக்கின்றது.

மித்திரவிந்தை

மித்திரவிந்தை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஐந்தாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

பாகவதம், இவள் குந்தியின் தமக்கை இராசாத்தி தேவி்யினதும், அவந்தி நாட்டரசன் ஜெயசேனனதும் மகள் என்கின்றது. இவளது தமையர்களான விந்தன், அனுவிந்தன் துரியோதனனின் தோழர்கள் என்றும் அது சொல்கின்றது.[ விஷ்ணு புராணத்தில் மித்திரவிந்தை, "சைப்பியை" ( சிபி வம்சத்தவள்) என்ற பெயரால் அவள் சுட்டப்படுகின்றாள். அரி வம்சம் கூறுவதன் படி, அவள் சிபி மன்னனின் மகளான "சுதத்தை".


பாகவதத்தில், மித்திரவிந்தையின் கண்ணனுடனான திருமணம், சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவளது குடும்பத்தவர், அவளைத் துரியோதனனுக்கு மணக்க முடிவு செய்திருந்ததாகவும், அவளோ கண்னனைக் காதலித்ததாகவும், அவளுக்கு வைக்கப்பட்ட மணத்தன்னேற்பில், கண்ணன் அவளைக் கவர்ந்து சென்றதாகவும் பாகவதம் சொல்கின்றது.

இன்னொரு கதையில், பலராமரின் ஆணைப்படி, அவந்தி நாடு கௌரவருடன் இணைவது துவாரகைக்கு அச்சுறுத்தல் என்பதால், கண்ணன் தன் மைத்துனியான மித்திரவிந்தையை மணக்க வற்புறுத்தப்பட்டதாகவும், அவன் சுபத்திரையை அழைத்துச் சென்று அவள் மனமறிந்து, மித்திரவிந்தையின் சம்மதத்துடன் அவளைக் கவர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

விருகன், கர்சன், அண்ணிலன், கிரீத்திரன், வர்த்தனன், உன்னடன், மகாம்சன், பவணன், வக்கினி, சுதி எனும் பதின்மர் மித்திரவிந்தையின் மைந்தர்களாகச் சொல்லப்படுகின்றனர். சங்கிராமசித்து முதலான பல மைந்தர்கள் அவளுக்கு இருந்ததாக விஷ்ணு புராணம் சொல்கின்றது. கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

 

ராதை

ராதை (தேவநாகரி: राधा, ராதா), ராதிகா, ராதாராணி மற்றும் ராதிகாராணி என்றும் அழைக்கப்பட்டவர், பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மையான பக்தை ஆவார். ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவதுடன், இன்றைய கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில் முதன்மைபடுத்தி சிறப்பிக்கப்படும், புராதனமான பெண் தெய்வம் அல்லது சக்தியாகக் கருதப்படுகிறார். பிரம்ம வைவர்த புராணம், கார்கா சம்ஹித்தா மற்றும் பிரைஹாட் கௌதமிய தந்திரம் போன்ற நூல்களைப் போல, இந்த நூலிலும் கிருஷ்ணர் உடனான ராதாவின் உறவுமுறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் ராதா வணங்குவதற்கு உரிய முதன்மையான காட்சிப் பொருளாவார், நிம்பர்காவைப் போல, ராதா மற்றும் கிருஷ்ணர் இருவரும் ஒன்று சேர்ந்து இருந்தது முற்றிலும் உண்மையாகக் கருதப்படுவதாக, இந்தப் பரம்பரையை நிறுவியவர் அறிவித்தார்.

பேச்சின் போது ராதாராணி அல்லது ராதிகா என்று ராதா அடிக்கடி அழைக்கப்படுவதுடன், அவர் பெயருக்கு முன்னால் மதிப்பளிக்கும் வார்த்தையானஸ்ரீமதிஎன்று கடவுளைப் பின்பற்றுபவர்களால் குறிப்பிடப்படுகிறார். ராதா பெண் தெய்வம் லட்சுமியின் மிக முக்கிய அவதாரங்களில் ஒருவர் ஆவார்.

மகாபாரதம் மற்றும் பாகவத புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் போன்றவற்றில் சொல்லப்பட்ட கதையில், கிருஷ்ணர், பிருந்தாவனம் கிராமத்தில் கோபியர்கள் என்று அழைக்கப்பட்ட இடையர் இன இளம் பெண்களின் தோழமையில், தன் அதிகப்படியான இளமைப் பருவத்தைச் செலவழித்தார். மகாபாரதம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் முந்தைய வாழ்க்கையை சற்று விரிவாக விவரிக்கவில்லை, மாறாக அதற்குப் பிறகான குருச்சேத்திரப் போரில் அதிக கவனம் செலுத்தியது, ஆனால் பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் கடந்த காலக் குழந்தைப் பருவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. பாகவத புராணத்தில், ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் தான் இளைஞராக வளர்ந்து வரும் சமயத்தில், கோபியர்களுள் ஒருவருடன் விளையாடியதாக மறைமுகமாக அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகவத புராணத்தின் கூற்றின்படி, கிருஷ்ணர் தனது 10 வது வயது, 7வது மாதத்தில், பிருந்தாவனத்தை விட்டு வெளியேறி மதுராவிற்குச் சென்றார்.[6] கிருஷ்ணன் பிருந்தாவனை விட்டு வெளியேறிய சமயத்தில், ராதாவும் பத்து வயதுடையவராகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பின்னர் வெளிவந்த கீத கோவிந்தம் என்ற நூலில் ராதாவைப் பற்றி சற்று விளக்கமாகத் தரப்பட்டுள்ள விவரங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

வைஷ்ணவத்தில்

வைஷ்ணவ சமயம் அல்லது இந்து மத பக்திப் பாரம்பரியத்தில் கிருஷ்ணர் மையப்படுத்தப்படுகிறார், ராதா, கிருஷ்ணனின் பெண் நண்பர் மற்றும் ஆலோசகர் ஆவார். இந்தப் பாரம்பரியங்களின் சில ஆதரவாளர்களுக்காக, கிருஷ்ணரைப் போன்றோ அல்லது அவரை விட அதிகமாகவோ ராதா முக்கியத்துவம் பெறுகிறார். கிருஷ்ணரின் புராதன சக்தியாக ராதா இருக்கலாம் என்று கருதப்படுவதுடன், நிம்பர்கர் சம்பிரதாயம் மற்றும் அதைப் பின் தொடர்ந்து வரும் கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தின் அங்கமான சைதன்ய மஹாபிரபு ஆகிய இரண்டிலும் ராதா மிகப் பெரிய பெண் தெய்வமாகக் கருதப்படுகிறார். மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். அதோடு ராதா, கிருஷ்ணரின் விருப்பத்தில் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணருடனான அவர் உறவு முறையின் இரண்டு வகைகள்: ஸ்வாக்ய-ரஸா (திருமணமான உறவுமுறை) மற்றும் பராகியா-ரஸா (முடிவற்ற மனப்பூர்வமானஅன்பைக்குறிப்பிடும் உறவுமுறை).

நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில், கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை ஸ்வாக்கிய-ரஸா என்று சிறப்பிக்கப்படுவதுடன், பிரம்ம வைவர்த பூரணம் மற்றும் கர்கா சம்ஹித்தா போன்ற நூல்கள் அடிப்படையில் ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் திருமணத்தை விவரிக்கிறது. கௌடிய பாரம்பரியம் காதலின் உயர்ந்த நிலையை பராகியா-ரஸா வில் மையப்படுத்துகிறது, அத்துடன் ராதாவும், கிருஷ்ணனும் பிரிந்திருந்தாலும் நினைவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வுலகைச் சார்ந்த பாலுணர்வைப் போலன்றி, அடிப்படையில் உயர்ந்த, கடவுளைப் பற்றிய இயல்பான காதலைப் போல, கிருஷ்ணனை எண்ணிய கோபியர்களின் காதல் மறைபொருளின் மூலம் விவரிக்கப்படுகிறது.

இயற்கையில் கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை பற்றிய உயர்ந்த இரகசியத்தை ஏன் மற்ற புராண நூல்களில் ராதாவைப் பற்றிய கதையில் விரிவாகக் குறிப்பிடவில்லை என்று கௌடிய மற்றும் நிம்பர்க வைஷ்ணவப் பள்ளிகளின் சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிறப்பு

கடவுள் கிருஷ்ணரின் காதலியான ராதா ஒரு கூர்ஜரியாவார் (இடையர் குலப்பெண்), அத்துடன் இந்தியாவின் இன்றைய புது டெல்லிக்கு அருகாமையிலுள்ள பிருந்தாவனத்தில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பார்சனா அல்லது ராவல் ஆகிய இரண்டு கிரமங்களில் ஒன்றில் பிறந்தார். அவர் பாரம்பரியத்தில் பல்வேறு விவரணைகள் உள்ளன. விர்சபானு என்பவர் இடையர்களின் தலைவராக இருந்தார் என்பதுடன், ராதாவின் தந்தையும் ஆவார். விர்சபானு கடவுள் நாராயணனின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அதே சமயம் அவர் தாய் கலாவதி பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பிருந்தாவனில் ராதாவின் இறைவழிபாடு சிறப்புமிக்கது. அங்கு அவரின் முக்கியத்துவம் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை விஞ்சக்கூடியதாக இருக்கிறது. கௌடிய வைஷ்ணவத்தில் கிருஷ்ணரிடத்தில் ராதாவின் அன்பு மிகவும் உயர்ந்ததாக முதன்மைபடுத்தப்படுகிறது, ஏனெனில் அது முடிவற்றதுடன், நிபந்தனையற்ற தன்மையைக் கொண்டது. ஆகவே ராதா, கிருஷ்ணருக்குஅவரின் இதயம் மற்றும் ஆன்மா’, மற்றும் அவரின்ஹிலாந்தி-சக்தி’ (மன வலிமைத் தோழமை) ஆகிய அளவுகளில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார்.

பிரிஹட்-கௌதமிய தந்திரத்தில், ராதாராணி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறார்: “இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண்தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.”

நிம்பர்க்கர்

நிம்பர்க்கர் என்பவர் ராதாவைப் பற்றிய கொள்கைகளை எங்கும் பரவச் செய்த முதல் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார்.

சைதன்ய மகாபிரபு

ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரின் அவதாரங்கள் ஒரே வடிவத்திலானவை (நவீன கால இஸ்கான் இயக்கம்) என, வங்காளத் துறவியான சைதன்ய மஹாபிரபு (1486 - 1534) முற்றிலும் நம்புகிறார். சைதன்யர் தன் வாழ்க்கை முழுவதும், வைஷ்ணவப் பாரம்பரியத்தின் பக்தராகவே வாழ்ந்தார், மேலும் அவர் எந்த அவதாரத்தின் வடிவத்தையும் வெளிப்படையாகக் கோரவில்லை, ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் தனக்கு நெருங்கிய சம்பந்தமுள்ள தெய்வீக வடிவத்தை அவர் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

ராதாவின் பிறந்த நாள் ராதாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அனுமதிக்கப்படாத பக்தர்கள் இந்தச் சமயத்தில் சிறப்பான முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்காக, அவரின் பொருட்டு குற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதன் காரணமாக, ராதாவின் பெயர் பொதுவாகப் பாடப்படுவதில்லை. அவர் குண்டம், அல்லது ஏரி ஆகியவற்றினுள் அனைத்து பக்தர்களும் நுழைவதற்குத் தகுதி பெறுவது, ஹோலியாகக் கருதப்படுகிறது.

ராதா குண்டம் (ராதாராணியின் ஏரி) தோற்றத் திருவிழா நாளில், அங்கே குளிப்பதற்குப் பக்தர்கள் நடு இரவு வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின்தோன்றும் நாள்அல்லதுபிறந்த நாள்இல் அவரின் ஹோலிப் பெயர்கள் அங்கே பாராயணம் செய்யப்படுகிறது. அவர்தோன்றுவதாகச்சொல்லப்படுகிறது, ஏனெனில் அவர் பிறப்பு அல்லது இறப்பு எதையும் கொண்டிருப்பதில்லை, அத்துடன் தளைகளை நீக்குவதற்குக் கிருஷ்ணருடன் நிரந்தரமாகச் சேர்ந்திருக்கிறார். அவர் கிருஷ்ணரை "திருமணம்" செய்து கொள்வதற்கு ஏற்ற மிகவும் தூய்மையானப் பெண் ஆவார்.

ராதா கொண்டுள்ள பல சிறப்புப் பெயர்கள் அவரது பண்புகள் மற்றும் சிறப்பியல்புகளை விவரிக்கிறது.

  • ராதிகாஇது மிகவும் பொதுவான சிறப்புப் பெயர் என்பதுடன், கிருஷ்ணரைப் பற்றிய அவரின் இறைவழிபாடு ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர் தனது அதிகாரத்தை மையப்படுத்துவதுடன், மனதைத் தெளிவாக்குவதை உள்ளடக்கியுள்ளார். பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரமாவார். அழகு, அறிவு, மற்றும் சிறந்த நற்பெயரைக் கொண்டவர்.
  • காந்தாவரிகைதேர்ந்த பாடகர்
  • கோவிந்த-நந்தினிஇவர் கோவிந்த (கிருஷ்ண) னிற்கு மன நிறைவைத் தருகிறார்.
  • கோவிந்த-மோஹினிஇவர் கோவிந்தனைக் கலக்கமடையச் செய்கிறார்.
  • கோவிந்த-சர்வாசவாஇவர் கோவிந்தனிற்கு மிகவும் முக்கியமானவரும், அல்லது அனைத்துமாவார்.
  • சர்வ-காந்த ஷிரோமனிகிருஷ்ணரின் அனைத்து மனைவிகளின் மகுட அணிகலனாகும்.
  • கிருஷ்ணமயிஇவர் கிருஷ்ணனை உள்ளும், புறமுமாகப் பார்ப்பவர்.
  • மதன்-மோகன்-மோகினிகௌடிய பாரம்பரியத்தில் கிருஷ்ணர் (மிக முக்கியமான ஒருவராக) ஈர்ப்புக் கடவுளான காமதேவன் (மதன்) உள்ளிட்ட வாழும் அனைவரையும் வசீகரிப்பவராக நம்பப்படுகிறது. ஆகவே கிருஷ்ணனே ஆயினும் வசீகரிக்கும் நிலையிலான தனித்தன்மையைக் கொண்டுள்ளார் ராதா, ஆகவே அவர் மதன்-மோகன்-மோகினி: மன்மதனை வசீகரிப்பவரை வசீகரிப்பவர், என்றழைக்கப்படுகிறார் .
  • ஆராதனாராதாராணி பெயரின் ஆதாரமாவார் அத்துடன், கிருஷ்ணனை வழிபடுவதில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறது.
  • சர்வ-லட்சுமிஅனைத்து நற்பேறுள்ள பெண் தெய்வங்களின் புராதனமான மூலாதாரமாகும்.
  • விர்ஷபானு-நந்தினிவிர்சபானுவின் மகள்
  • பிருந்தாவனேஷ்வரிபிருந்தாவனத்தின் அரசி
  • லலிதா-சக்திகோபி லலிதாவின் நண்பர்
  • கோகுலா-தருணிஇவரே கோகுல இறை வழிபாட்டின் அனைத்து இளம் பெண்களாவார்.
  • தாமோதர ரதிஇவர் தாமோதரனை (கிருஷ்ணர்) விரும்புவதற்கு அவரே உடையாகிறார்.
  • ராதாராணிஅரசி ராதா
  • ராதாகிருஷ்ணாகிருஷ்ணர் அவரே ராதாவின் வடிவத்தில் (ராதா உடனான கிருஷ்ண வழிபாடு)
  • விரஜ்ரனிவிரஜ் இன் அரசி (கிருஷ்ணர் அரசராக இருந்தபோது)
  • ஸ்வாமினிஜிகிருஷ்ணரின் நண்பர்

அவர் பெயர்களுள் ஒன்றான, ஹரா (நாரத-பஞ்சரத்ரம் 5.5.59 இல் குறிப்பிடப்பட்டது), விளிவேற்றுமையில் ஹரே என்பது, மிகவும் புகழ்பெற்ற வேத மந்திரங்களுள் ஒன்றான ஹரே கிருஷ்ணாமஹா-மந்திரத்தின்ஒரு பகுதியை கௌடிய வைஷ்ணவர்களின் மத்தியில் தோற்றுவித்தது. கௌடிய வைஷ்ணவ மதப் பழக்க வழக்கங்களில் ராதாராணியின் பெயர் மிக முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது.

ராதாராணியின் ஒவ்வொரு பெயரின் சாரத்தையும் நாமாவளியுடன் முழுமையாகத் தெரிந்து கொள்வதற்குஐபிஎ சமஸ்கிருதத்தின் 100 நன்னிமத்தமான பெயர்கள்.

ராதாவிற்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கோயில்கள்

  • வட இந்தியாவின், மதுரா மாவட்டத்தில் உள்ள பார்சானா மற்றும் பிருந்தாவனில் ராதாவல்லப் கோயில் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் ராதா மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின், டெக்ஸாஸில் உள்ள ஆஸ்டினில் காணப்படும் பார்சனா தாம் என்ற மேற்கு பூமியின் அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில்களுள் ஒன்றாகும்

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோயில் தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக முதலில் ராதாரணி என்றும் பின்னர் கிருஷ்ணர் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமதி ராதாராணியின் கருணையின் மூலம் கிருஷ்ணரை அணுக முடியும், அத்துடன் வேறு எவராலும் முடியாது. உதாரணத்திற்காக, ஒருவர் பிருந்தாவனில் உள்ள கோவிந்தாஜி கோயிலிற்குள் நுழைந்திருந்தால், தெய்வங்கள் ராதா கோவிந்தா என்று பெயரிடப்பட்டு இருக்கும், அத்துடன் கிருஷ்ணரின் பக்தர்கள் அவரை மட்டுமின்றி, ராதா மற்றும் கோவிந்தா ஆகிய இருவரையும் வழிபட்டிருக்க வேண்டும். ஏனெனில் ராதாராணியின் அன்பினால் கிருஷ்ணர் கட்டுண்டுள்ளார்.

ராதாவைப் பற்றிய மேற்கோள்கள்

  • இரவின் தொடக்கத்தில் நிலாவின் சுடரொளி மிகச்சிறந்ததாக இருந்தபோதும், பகல்நேரத்தில் அது மங்கிப் போனதாக இருக்கும். அதேபோல, பகல் நேரத்தின் போது தாமரை அழகாக இருந்தாலும், இரவு நேரத்தில் அது முடிவுறும். ஆனால், என்னுடைய நண்பர்களே, என்னுடைய மிகவும் அன்புக்குரிய ஸ்ரீமதி ராதாராணியின் முகம், இரவு மற்றும் பகல் இரண்டின்போதும், எப்போதும் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆகவே எதை அவருடைய முகத்துடன் ஒப்பிடுவது?” (விதக்த-மாதவா 5.20)
  • ஸ்ரீமதி ராதாராணி சிரிக்கும்போது, மகிழ்ச்சி அலைகள் அவர் கன்னங்களைக் கடந்து செல்லும், மேலும் அவரின் வில்லைப் போன்ற வளைந்த கண்புருவங்கள் அழகு மிக்க வானவில்லைப் போல் நடனமாடும். அவரின் கடைக்கண் பார்வையின் வசீகரம், மதிமயக்கத்தின் காரணமாக தடுமாறித் திரியும் பெரிய வண்டின் நடனத்தைப் போல இருக்கும். அந்த வண்டு என் இதயத்தின் நடுவில் இருக்கும் சிறிய வளையத்தை கடிப்பது போல இருக்கும்.” (விதக்த-மாதவா 2.51)
  • ஸ்ரீமதி ராதாராணி, கிருஷ்ணரின் மிகவும் அன்புக்குரியவர், அதேபோல அவரின் குளிக்கும் குளம் மிகவும் அருமை நிறைந்தது. அனைத்து கோபியர்களில், அவர் கடவுளின் மிகவும் அன்பிற்குரியவர்.” (பத்ம பூரணம்)
  • இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண் தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.” (பிரைஹட் கௌதமிய தந்திரம்)
  • கடவுள் மாதவனுள் ஸ்ரீ ராதா புகழ் பெற்றதைப் போல, அவர் துணையாக ஸ்ரீ ராதா அனைத்து மனிதர்களுக்கு மத்தியில், புகழ்பெற்று விளங்குகிறார்.” (ரிக்-பரிஸிஸ்தம்)

ருக்மணி

ருக்மணி (Rukmani) விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவாள். ருக்மணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன. திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் முதன்மையான மனைவி ஆவார். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன் ஆவார். பிரத்தியுமனனுக்கும், ருக்மியின் மகளான ருக்மாவதிக்கும் பிறந்தவரே அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார்ருக்மணி இலக்குமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

வரலாறு

ருக்மணியின் சகோதரன் ருக்மி தன் நண்பனும், சேதி நாட்டு அரசனுமான சிசுபாலனுக்கு தன் சகோதரி ருக்மணியைக் மணமுடித்து கொடுக்கத் தானாகவே முடிவு செய்ததால், ருக்மணி தமது துயரையும் தாம் கிருஷ்ணரின் குணங்களால் முன்னமே கவரப்பட்டவள் என்பதையும் தம்மை வந்து காப்பாற்றாவிடில் உயிரை விட்டுவிடப் போவதாக முடிவு செய்திருப்பதையும் கிருஷ்ணருக்கு செய்தியை தூது சொல்லியனுப்பினார்.

செய்தி பெற்று கவலையுற்ற கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு கிளம்பினார். மறுநாள் ருக்மணி, அம்பிகை பார்வதி தேவியின் திருக்கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டி பிரார்த்தித்து திரும்பும் வழியில், கிருஷ்ணர், ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றி கொண்டு துவாரகை திரும்பி திருமணம் செய்து கொண்டார்.

 

ஜாம்பவதி

ஜாம்பவதி, இராமாயண காவிய மாந்தரான ஜாம்பவானின் மகள். ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு மனைவியர்களில் இரண்டாமவர். கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த பத்து மகன்களில் முக்கியமானவரான சாம்பன், துரியோதனின் மகளான லட்சனாவின் கணவன் ஆவார்.

சூரியதேவன், யாதவ குல முக்கிய பிரமுகர் சத்யஜித்துக்கு வரமாக வழங்கிய, செல்வத்தை வாரி வழங்கும் சியாமந்தக மணியை, அவன் தம்பி பிரசேனன் அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றவிடத்து சிங்கத்தால் கொல்லப்பட்ட நேரத்தில், அவ்வழியே வந்த ஜாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று சியமந்தக மணியைக் கைப்பற்றி அதனை தன் மகள் ஜாம்பவதிக்கு அளித்தார்.

கிருஷ்ணர் பலமுறை கேட்டும் சியாமந்தக மணியை தான் தராததால், கிருஷ்ணரே தன் தம்பி பிரசேனனைக் கொன்று மணியை கவர்ந்ததாக சத்யஜித் வதந்தி பரப்பினான். தன் மீது விழுந்த வீண் பழியை துடைக்க, கிருஷ்ணர், பிரசேனன் வேட்டைக்கு சென்ற காட்டிற்குச் சென்று தேடுகையில், பிரசேனனும் ஒரு சிங்கமும் குகைக்கருகில் இறந்து கிடப்பதைக் கண்டார். மேலும் சியாமந்தக மணி பிரசேனனிடம் இல்லாததையும் கண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் இருந்த குகையில் சென்று பார்க்கையில் ஒளி வீசும் சியாமந்தக மணியையும், அதை வைத்திருந்த ஜாம்பவதியையும் கண்டார்.

கிருஷ்ணர் ஜாம்பவானுடன் மோதி வென்று, ஜாம்பவதியை திருமணம் செய்து கொண்டு, சியாமந்தக மணியை சத்யஜித்திடம் ஒப்படைத்தார். இதனால் மனம் மகிழ்ந்த சத்யஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.

   -  இலக்குமணை

    -   ‌‌த்தியபாமா

- நக்னசித்தி             -   நப்பின்னை

  -  பத்திரை (கண்ணன் தேவி)

  -  மித்திரவிந்தை

  -  ராதை       -   ருக்மணி

  -  ஜாம்பவதி

 

 

இலக்குமணை

        இலக்குமணை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் எட்டாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது

வீணை வாசிப்பதில் வல்லவரான   பிருகத்சேனரின் மகளாக இலக்குமனை சொல்லப்படுகின்றாள். மத்ரதேச இளவரசியாக, "மாத்திரி" என்ற பெயரில், இவள் பொதுவாகச் சுட்டப்படுகின்றாள்.

விஷ்ணு புராணம்: இலக்குமணையை "சாருகாசினி" என்றழைப்பதுடன், அவளை எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடும் போதும், "மாத்திரி" என்ற பெயரில், இன்னொருத்தியையும் சொல்கின்றது. பாகவத புராணம்: மத்திர நாட்டின் பெயர் தெரியா மன்னன் ஒருவனின் மகளாகவும், நற்குணங்கள் வாய்ந்தவளாகவும் இலக்குமணையை இனங்காட்டுகின்றது. பத்ம புராணம்: மத்திரநாட்டு மன்னனை, "பிருகத்சேனன்"' என்று அடையாளம் காட்டுகின்றது.


அரி வம்சம்: இதுவும் அவளை "சாருகாசினி என்கின்றது. எனினும் விஷ்ணு புராணம் போலவே, மத்திரநாட்டுடன் இணைக்கவில்லை. "சுபீமை" எனும் பெயருடன் வேறொருத்தியை "மாத்திரி" என்ற பெயரில் எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடுகின்றது. இலக்குமணைக்கு, அவள் தந்தை வைத்த மணத்தன்னேற்பில் கண்ணன் அவளைக் கவர்ந்துகொண்டதாக, பாகவத புராணம் விவரிக்கின்றது   இன்னொரு கதையில், ஜராசந்தன், துரியோதனன் ஆகியோரே தவறவிட்ட விற்போட்டியொன்றில் வென்று, அவளைக் கண்ணன் மாலையிட்டதாகச் சொல்லப்படுகின்றது.அப்போட்டியில் அருச்சுனன் பங்குபற்றி, வேண்டுமென்றே தோற்றுப்போனதாகவும் பீமன் போட்டியில் கலந்துகொள்ளாது தவிர்த்ததாகவும் அக்கதை நீள்கின்றதுகண்னனும் அவனது எண்மனையாட்டியரும் ஒருமுறை அத்தினாபுரம் சென்றபோது,. நாணமும் கம்பீரமும் நிறைந்த இலக்குமணை, தன்னைக் கண்ணன் மணந்த வரலாற்றை திரௌபதியிடம் விவரிக்கின்றாள்.

பிற்கால வாழ்க்கை

பாகவத புராணத்தின் படி, பிரகோசன், கத்திரவான், சிங்கன், பலன், பிரபலன், ஊர்த்துவகன், மகாசக்தி. சகன், ஓயன், அபராயிதன் என்று அவளுக்கு பத்துக் குழந்தைகள்.[ விஷ்ணு புராணம், அவளுக்கு கத்திரவான் முதலான பல மைந்தர் இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றது. கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

சத்யபாமா

         சத்யபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.  இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப் பெறுகிறார். ஒரு பெண்ணால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன் எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ‌‌த்யபாமாவிற்கு தேரோட்டியாக கிருஷ்ணன் பாரதகிருஷ்ணராக சென்று நரகாசுரனை வதம்புரிந்ததார் நரகாசுரன் பிரக்ஜோதிஷ்பூர் என்ற நாட்டை ஆண்டு கொண்டு அங்குள்ள மக்கள்களையும், பெண்களையும், தேவர்களையும், பஞ்சபூதங்களையும் தனது சர்வதிகார ஆட்சியில் கொடுமை செய்து வந்தான். இதில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்யும் முறையயை (சிவந்த பஞ்சகம்) என்றும் தமிழில் சிவந்தமண்களம் என்று கூறபடுகின்றது.

இந்த வதத்தில் நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் ஐந்து முறை முயற்சிகிறார். இதை பஞ்சவியூக முறை என்று கூறபடுகின்றது. முதலில் நரகாசுரனின் நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பலை கிருஷ்ணர் தனது அக்னி அஸ்திரத்தால் அந்த கப்பலை கடலில் கவிழ்த்துவிட்டார். அடுத்ததாக தேவர்களையும், பஞ்சபூதங்களையும் தனது வசபடுத்தி வைத்திருந்த நரகாசுரனின் இடம் இருந்து மீட்டேடுத்தார் கிருஷ்ண பரமாத்மா மேலும் நாட்டு மக்கள்களையும், பெண்களையும் அடிமைவிலங்கை நீக்க நினைத்தபோது கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை பேரழகியாக அலங்கரித்து நரகாசுரனின் முன்பு நடனம் ஆட செய்து கிருஷ்ணர் சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஆடவைத்து ஒரு அடிமை நாடகம் போல் நடத்தினார் கிருஷ்ணர். (இதனால் தான் இன்றளவும் தீபாவளி தினத்தன்று சாட்டையில் நெருப்பு வைத்து கொண்டாட படுகின்றது) இந்த நிகழ்வை கண்ட நரகாசுரன் தனது இறப்பு நேருங்கியதை கண்டு அச்சமுற்ற போதிலும் சத்யபாமாவின் அழகை கண்டு தனது நிலையயை மாற்றி கொண்டு அந்த அடிமையாக இருந்த மக்கள்களையும், பெண்களையும் விடுவித்தான்.

பின்பு போர்களத்தில் சண்டையின் போது கிருஷ்ணருக்கும்-நரகாசுரனுக்கும் போர் நடந்தபோது போர்களத்தின் பூமியே இரத்தத்தால் சிவந்து கிடந்தது. இறுதியில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவின் கையால் தான் நரகாசுரனை அழிக்க கடைசி முறையாக நரகாசுரன் அம்பு மழை பொழிதான் இதில் கிருஷ்ணர் தந்திரமாக விலகி கொண்டு அந்த அம்புகள் எல்லாம் மனைவி சத்யபாமாவை நோக்கி பாய்ந்து அவள் நெஞ்சை அம்பு குத்திவிட்டது. அந்த வலியயையும் பொருட்படுத்தாமல் அந்த அம்பினை நெஞ்சில் இருந்து இரத்தம் சிந்த எடுத்து அந்த அம்பாலயே நரகாசுரனை குத்தி வதம் செய்துவிட்டால் என்று வைணவ நூல்கள் கூறுகிறது.

 

நக்னசித்தி

நக்னசித்தி என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். சத்தியை என்றும் அழைக்கப்படும் இவள், எண்மரில் ஆறாவது ஆவாள். இவள் வரலாறு, பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

நக்னசித்தி, அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னசித்துவின் மகள் ஆவாள். சத்தியை, கோசலை என்று இவளைப் பொதுவாக அழைக்கிறது பாகவதம் முதலான நூல்கள். மகாபாரதமும், "சத்தியை" என்ற எண்மனையாட்டியரில் ஒருத்தி பற்றிக் குறிப்பிடுகின்றது இவளே தமிழ் மரபில் நப்பின்னையாக அறியப்படுகின்றாள்.

நக்னசித்து வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று, கண்னன் சத்தியையைக் கரம்பிடித்தான். அவளது மனத்தன்னேற்புக்கு வந்து தோற்றுப்போன ஏனைய இளவரசர்கள், அவர்கள் துவாரகை திரும்பும் வழியில் தாக்கும் போதும், கண்ணனின் யாதவப்படையும், அருச்சுனனும் இணைந்து, அவர்களைத் தோற்கடித்தனர்.

நக்னசித்திக்கு, வீரன், சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள். "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவளுக்கு இருந்ததாக, விஷ்ணு புராணம் சொல்கின்றது. கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

.

நப்பின்னை

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் நூல்களும் சைவத் திருமுறைகளும், வைணவப் பாசுரங்களும் குறிப்பிடும் கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக்கூத்தையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது. மிதிலை அரசனான கும்பக்கோன்  தன் காளைகளை அடக்குபவனுக்கு நப்பின்னை கிடைப்பாள் என்று அறிவித்து வைக்கும் போட்டியில் கண்ணன் கலந்துகொண்டு, ஏறுதழுவி வென்று, நப்பின்னையை மணம் புரிகின்றான்.

காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் "உபகேசி" என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள். கண்ணனின் திருவிளையாடல்களையும், தேவியரையும் பற்றிக் கூறும் பாகவதம், மகாபாரதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களிலோ, வடநாட்டு இலக்கியங்களிலோ இவள் பற்றிய குறிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை. எனினும், குறைந்தபட்சச் சான்றுகளின் அடிப்படையில், இவளை, கண்ணனின் எண்மனையாட்டியரில் ஒருத்தியான நக்னசித்தியாக இனங்காண்பதுண்டு  சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.

ஆண்டாள் தன் திருப்பாவையிலும், நம்மாழ்வார் "பின்னைமணாளன்"  (நம்மாழ்வார் பிர. என்றும், திருமழிசையாழ்வார் "பின்னைகேள்வ" (மழிசையாழ்வார் பிர.) என்றும், இன்னும் பலவிதமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பலவாறாகக் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றது.

சைவ இலக்கியங்கள்

மாணிக்கவாசகர், திருமாலை, "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்" என்றும், சுந்தரர் "பின்னை நம்பும் புயத்தான்" என்றும் பாடுகின்றனர்.

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.  எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.

 

பத்திரை

பத்திரை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஏழாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

கேகய நாட்டின் இளவரசி என்பதால், இவள் கைகேயி எனப்படுகின்றாள். திருட்டகேது மற்றும் குந்தியின் சகோதரியான சுருதகீர்த்தி ஆகியோரின் மகள் இவள்.  மணத்தன்னேற்பில் இவள் கண்ணனைத் தன் நாயகனாக வரித்துக் கொண்டாள்.

சங்கிராமசித்து, பிருகச்சேனன், சூரன், பிராகரணன், ஆர்சித்து, சயன், சுபத்திரன், வாமன், ஆயுர், சத்தியகன் என மித்திரவிந்தைக்குப் பத்து மைந்தர் என்கின்றது பாகவதம்  கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

பத்திரா கல்யாணம்

"பத்திரா கல்யாணம்" என்னும் நூல் தெலுங்கில், கலாநிதி .கே..வி.கிருஷ்ணகுமாரி என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. பத்திரையின் அழகு, காதல், அவளுக்கும் கண்ணனுக்கும் நடந்த திருமணம் என்பவற்றை அந்நூல் அழகுற வர்ணிக்கின்றது.

மித்திரவிந்தை

மித்திரவிந்தை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஐந்தாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

பாகவதம், இவள் குந்தியின் தமக்கை இராசாத்தி தேவி்யினதும், அவந்தி நாட்டரசன் ஜெயசேனனதும் மகள் என்கின்றது. இவளது தமையர்களான விந்தன், அனுவிந்தன் துரியோதனனின் தோழர்கள் என்றும் அது சொல்கின்றது.[ விஷ்ணு புராணத்தில் மித்திரவிந்தை, "சைப்பியை" ( சிபி வம்சத்தவள்) என்ற பெயரால் அவள் சுட்டப்படுகின்றாள். அரி வம்சம் கூறுவதன் படி, அவள் சிபி மன்னனின் மகளான "சுதத்தை".


பாகவதத்தில், மித்திரவிந்தையின் கண்ணனுடனான திருமணம், சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவளது குடும்பத்தவர், அவளைத் துரியோதனனுக்கு மணக்க முடிவு செய்திருந்ததாகவும், அவளோ கண்னனைக் காதலித்ததாகவும், அவளுக்கு வைக்கப்பட்ட மணத்தன்னேற்பில், கண்ணன் அவளைக் கவர்ந்து சென்றதாகவும் பாகவதம் சொல்கின்றது.

இன்னொரு கதையில், பலராமரின் ஆணைப்படி, அவந்தி நாடு கௌரவருடன் இணைவது துவாரகைக்கு அச்சுறுத்தல் என்பதால், கண்ணன் தன் மைத்துனியான மித்திரவிந்தையை மணக்க வற்புறுத்தப்பட்டதாகவும், அவன் சுபத்திரையை அழைத்துச் சென்று அவள் மனமறிந்து, மித்திரவிந்தையின் சம்மதத்துடன் அவளைக் கவர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

விருகன், கர்சன், அண்ணிலன், கிரீத்திரன், வர்த்தனன், உன்னடன், மகாம்சன், பவணன், வக்கினி, சுதி எனும் பதின்மர் மித்திரவிந்தையின் மைந்தர்களாகச் சொல்லப்படுகின்றனர். சங்கிராமசித்து முதலான பல மைந்தர்கள் அவளுக்கு இருந்ததாக விஷ்ணு புராணம் சொல்கின்றது. கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

 

ராதை

ராதை (தேவநாகரி: राधा, ராதா), ராதிகா, ராதாராணி மற்றும் ராதிகாராணி என்றும் அழைக்கப்பட்டவர், பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மையான பக்தை ஆவார். ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவதுடன், இன்றைய கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில் முதன்மைபடுத்தி சிறப்பிக்கப்படும், புராதனமான பெண் தெய்வம் அல்லது சக்தியாகக் கருதப்படுகிறார். பிரம்ம வைவர்த புராணம், கார்கா சம்ஹித்தா மற்றும் பிரைஹாட் கௌதமிய தந்திரம் போன்ற நூல்களைப் போல, இந்த நூலிலும் கிருஷ்ணர் உடனான ராதாவின் உறவுமுறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் ராதா வணங்குவதற்கு உரிய முதன்மையான காட்சிப் பொருளாவார், நிம்பர்காவைப் போல, ராதா மற்றும் கிருஷ்ணர் இருவரும் ஒன்று சேர்ந்து இருந்தது முற்றிலும் உண்மையாகக் கருதப்படுவதாக, இந்தப் பரம்பரையை நிறுவியவர் அறிவித்தார்.

பேச்சின் போது ராதாராணி அல்லது ராதிகா என்று ராதா அடிக்கடி அழைக்கப்படுவதுடன், அவர் பெயருக்கு முன்னால் மதிப்பளிக்கும் வார்த்தையானஸ்ரீமதிஎன்று கடவுளைப் பின்பற்றுபவர்களால் குறிப்பிடப்படுகிறார். ராதா பெண் தெய்வம் லட்சுமியின் மிக முக்கிய அவதாரங்களில் ஒருவர் ஆவார்.

மகாபாரதம் மற்றும் பாகவத புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் போன்றவற்றில் சொல்லப்பட்ட கதையில், கிருஷ்ணர், பிருந்தாவனம் கிராமத்தில் கோபியர்கள் என்று அழைக்கப்பட்ட இடையர் இன இளம் பெண்களின் தோழமையில், தன் அதிகப்படியான இளமைப் பருவத்தைச் செலவழித்தார். மகாபாரதம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் முந்தைய வாழ்க்கையை சற்று விரிவாக விவரிக்கவில்லை, மாறாக அதற்குப் பிறகான குருச்சேத்திரப் போரில் அதிக கவனம் செலுத்தியது, ஆனால் பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் கடந்த காலக் குழந்தைப் பருவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. பாகவத புராணத்தில், ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் தான் இளைஞராக வளர்ந்து வரும் சமயத்தில், கோபியர்களுள் ஒருவருடன் விளையாடியதாக மறைமுகமாக அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகவத புராணத்தின் கூற்றின்படி, கிருஷ்ணர் தனது 10 வது வயது, 7வது மாதத்தில், பிருந்தாவனத்தை விட்டு வெளியேறி மதுராவிற்குச் சென்றார்.[6] கிருஷ்ணன் பிருந்தாவனை விட்டு வெளியேறிய சமயத்தில், ராதாவும் பத்து வயதுடையவராகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பின்னர் வெளிவந்த கீத கோவிந்தம் என்ற நூலில் ராதாவைப் பற்றி சற்று விளக்கமாகத் தரப்பட்டுள்ள விவரங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

வைஷ்ணவத்தில்

வைஷ்ணவ சமயம் அல்லது இந்து மத பக்திப் பாரம்பரியத்தில் கிருஷ்ணர் மையப்படுத்தப்படுகிறார், ராதா, கிருஷ்ணனின் பெண் நண்பர் மற்றும் ஆலோசகர் ஆவார். இந்தப் பாரம்பரியங்களின் சில ஆதரவாளர்களுக்காக, கிருஷ்ணரைப் போன்றோ அல்லது அவரை விட அதிகமாகவோ ராதா முக்கியத்துவம் பெறுகிறார். கிருஷ்ணரின் புராதன சக்தியாக ராதா இருக்கலாம் என்று கருதப்படுவதுடன், நிம்பர்கர் சம்பிரதாயம் மற்றும் அதைப் பின் தொடர்ந்து வரும் கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தின் அங்கமான சைதன்ய மஹாபிரபு ஆகிய இரண்டிலும் ராதா மிகப் பெரிய பெண் தெய்வமாகக் கருதப்படுகிறார். மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். அதோடு ராதா, கிருஷ்ணரின் விருப்பத்தில் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணருடனான அவர் உறவு முறையின் இரண்டு வகைகள்: ஸ்வாக்ய-ரஸா (திருமணமான உறவுமுறை) மற்றும் பராகியா-ரஸா (முடிவற்ற மனப்பூர்வமானஅன்பைக்குறிப்பிடும் உறவுமுறை).

நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில், கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை ஸ்வாக்கிய-ரஸா என்று சிறப்பிக்கப்படுவதுடன், பிரம்ம வைவர்த பூரணம் மற்றும் கர்கா சம்ஹித்தா போன்ற நூல்கள் அடிப்படையில் ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் திருமணத்தை விவரிக்கிறது. கௌடிய பாரம்பரியம் காதலின் உயர்ந்த நிலையை பராகியா-ரஸா வில் மையப்படுத்துகிறது, அத்துடன் ராதாவும், கிருஷ்ணனும் பிரிந்திருந்தாலும் நினைவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வுலகைச் சார்ந்த பாலுணர்வைப் போலன்றி, அடிப்படையில் உயர்ந்த, கடவுளைப் பற்றிய இயல்பான காதலைப் போல, கிருஷ்ணனை எண்ணிய கோபியர்களின் காதல் மறைபொருளின் மூலம் விவரிக்கப்படுகிறது.

இயற்கையில் கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை பற்றிய உயர்ந்த இரகசியத்தை ஏன் மற்ற புராண நூல்களில் ராதாவைப் பற்றிய கதையில் விரிவாகக் குறிப்பிடவில்லை என்று கௌடிய மற்றும் நிம்பர்க வைஷ்ணவப் பள்ளிகளின் சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிறப்பு

கடவுள் கிருஷ்ணரின் காதலியான ராதா ஒரு கூர்ஜரியாவார் (இடையர் குலப்பெண்), அத்துடன் இந்தியாவின் இன்றைய புது டெல்லிக்கு அருகாமையிலுள்ள பிருந்தாவனத்தில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பார்சனா அல்லது ராவல் ஆகிய இரண்டு கிரமங்களில் ஒன்றில் பிறந்தார். அவர் பாரம்பரியத்தில் பல்வேறு விவரணைகள் உள்ளன. விர்சபானு என்பவர் இடையர்களின் தலைவராக இருந்தார் என்பதுடன், ராதாவின் தந்தையும் ஆவார். விர்சபானு கடவுள் நாராயணனின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அதே சமயம் அவர் தாய் கலாவதி பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பிருந்தாவனில் ராதாவின் இறைவழிபாடு சிறப்புமிக்கது. அங்கு அவரின் முக்கியத்துவம் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை விஞ்சக்கூடியதாக இருக்கிறது. கௌடிய வைஷ்ணவத்தில் கிருஷ்ணரிடத்தில் ராதாவின் அன்பு மிகவும் உயர்ந்ததாக முதன்மைபடுத்தப்படுகிறது, ஏனெனில் அது முடிவற்றதுடன், நிபந்தனையற்ற தன்மையைக் கொண்டது. ஆகவே ராதா, கிருஷ்ணருக்குஅவரின் இதயம் மற்றும் ஆன்மா’, மற்றும் அவரின்ஹிலாந்தி-சக்தி’ (மன வலிமைத் தோழமை) ஆகிய அளவுகளில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார்.

பிரிஹட்-கௌதமிய தந்திரத்தில், ராதாராணி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறார்: “இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண்தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.”

நிம்பர்க்கர்

நிம்பர்க்கர் என்பவர் ராதாவைப் பற்றிய கொள்கைகளை எங்கும் பரவச் செய்த முதல் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார்.

சைதன்ய மகாபிரபு

ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரின் அவதாரங்கள் ஒரே வடிவத்திலானவை (நவீன கால இஸ்கான் இயக்கம்) என, வங்காளத் துறவியான சைதன்ய மஹாபிரபு (1486 - 1534) முற்றிலும் நம்புகிறார். சைதன்யர் தன் வாழ்க்கை முழுவதும், வைஷ்ணவப் பாரம்பரியத்தின் பக்தராகவே வாழ்ந்தார், மேலும் அவர் எந்த அவதாரத்தின் வடிவத்தையும் வெளிப்படையாகக் கோரவில்லை, ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் தனக்கு நெருங்கிய சம்பந்தமுள்ள தெய்வீக வடிவத்தை அவர் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

ராதாவின் பிறந்த நாள் ராதாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அனுமதிக்கப்படாத பக்தர்கள் இந்தச் சமயத்தில் சிறப்பான முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்காக, அவரின் பொருட்டு குற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதன் காரணமாக, ராதாவின் பெயர் பொதுவாகப் பாடப்படுவதில்லை. அவர் குண்டம், அல்லது ஏரி ஆகியவற்றினுள் அனைத்து பக்தர்களும் நுழைவதற்குத் தகுதி பெறுவது, ஹோலியாகக் கருதப்படுகிறது.

ராதா குண்டம் (ராதாராணியின் ஏரி) தோற்றத் திருவிழா நாளில், அங்கே குளிப்பதற்குப் பக்தர்கள் நடு இரவு வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின்தோன்றும் நாள்அல்லதுபிறந்த நாள்இல் அவரின் ஹோலிப் பெயர்கள் அங்கே பாராயணம் செய்யப்படுகிறது. அவர்தோன்றுவதாகச்சொல்லப்படுகிறது, ஏனெனில் அவர் பிறப்பு அல்லது இறப்பு எதையும் கொண்டிருப்பதில்லை, அத்துடன் தளைகளை நீக்குவதற்குக் கிருஷ்ணருடன் நிரந்தரமாகச் சேர்ந்திருக்கிறார். அவர் கிருஷ்ணரை "திருமணம்" செய்து கொள்வதற்கு ஏற்ற மிகவும் தூய்மையானப் பெண் ஆவார்.

ராதா கொண்டுள்ள பல சிறப்புப் பெயர்கள் அவரது பண்புகள் மற்றும் சிறப்பியல்புகளை விவரிக்கிறது.

  • ராதிகாஇது மிகவும் பொதுவான சிறப்புப் பெயர் என்பதுடன், கிருஷ்ணரைப் பற்றிய அவரின் இறைவழிபாடு ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர் தனது அதிகாரத்தை மையப்படுத்துவதுடன், மனதைத் தெளிவாக்குவதை உள்ளடக்கியுள்ளார். பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரமாவார். அழகு, அறிவு, மற்றும் சிறந்த நற்பெயரைக் கொண்டவர்.
  • காந்தாவரிகைதேர்ந்த பாடகர்
  • கோவிந்த-நந்தினிஇவர் கோவிந்த (கிருஷ்ண) னிற்கு மன நிறைவைத் தருகிறார்.
  • கோவிந்த-மோஹினிஇவர் கோவிந்தனைக் கலக்கமடையச் செய்கிறார்.
  • கோவிந்த-சர்வாசவாஇவர் கோவிந்தனிற்கு மிகவும் முக்கியமானவரும், அல்லது அனைத்துமாவார்.
  • சர்வ-காந்த ஷிரோமனிகிருஷ்ணரின் அனைத்து மனைவிகளின் மகுட அணிகலனாகும்.
  • கிருஷ்ணமயிஇவர் கிருஷ்ணனை உள்ளும், புறமுமாகப் பார்ப்பவர்.
  • மதன்-மோகன்-மோகினிகௌடிய பாரம்பரியத்தில் கிருஷ்ணர் (மிக முக்கியமான ஒருவராக) ஈர்ப்புக் கடவுளான காமதேவன் (மதன்) உள்ளிட்ட வாழும் அனைவரையும் வசீகரிப்பவராக நம்பப்படுகிறது. ஆகவே கிருஷ்ணனே ஆயினும் வசீகரிக்கும் நிலையிலான தனித்தன்மையைக் கொண்டுள்ளார் ராதா, ஆகவே அவர் மதன்-மோகன்-மோகினி: மன்மதனை வசீகரிப்பவரை வசீகரிப்பவர், என்றழைக்கப்படுகிறார் .
  • ஆராதனாராதாராணி பெயரின் ஆதாரமாவார் அத்துடன், கிருஷ்ணனை வழிபடுவதில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறது.
  • சர்வ-லட்சுமிஅனைத்து நற்பேறுள்ள பெண் தெய்வங்களின் புராதனமான மூலாதாரமாகும்.
  • விர்ஷபானு-நந்தினிவிர்சபானுவின் மகள்
  • பிருந்தாவனேஷ்வரிபிருந்தாவனத்தின் அரசி
  • லலிதா-சக்திகோபி லலிதாவின் நண்பர்
  • கோகுலா-தருணிஇவரே கோகுல இறை வழிபாட்டின் அனைத்து இளம் பெண்களாவார்.
  • தாமோதர ரதிஇவர் தாமோதரனை (கிருஷ்ணர்) விரும்புவதற்கு அவரே உடையாகிறார்.
  • ராதாராணிஅரசி ராதா
  • ராதாகிருஷ்ணாகிருஷ்ணர் அவரே ராதாவின் வடிவத்தில் (ராதா உடனான கிருஷ்ண வழிபாடு)
  • விரஜ்ரனிவிரஜ் இன் அரசி (கிருஷ்ணர் அரசராக இருந்தபோது)
  • ஸ்வாமினிஜிகிருஷ்ணரின் நண்பர்

அவர் பெயர்களுள் ஒன்றான, ஹரா (நாரத-பஞ்சரத்ரம் 5.5.59 இல் குறிப்பிடப்பட்டது), விளிவேற்றுமையில் ஹரே என்பது, மிகவும் புகழ்பெற்ற வேத மந்திரங்களுள் ஒன்றான ஹரே கிருஷ்ணாமஹா-மந்திரத்தின்ஒரு பகுதியை கௌடிய வைஷ்ணவர்களின் மத்தியில் தோற்றுவித்தது. கௌடிய வைஷ்ணவ மதப் பழக்க வழக்கங்களில் ராதாராணியின் பெயர் மிக முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது.

ராதாராணியின் ஒவ்வொரு பெயரின் சாரத்தையும் நாமாவளியுடன் முழுமையாகத் தெரிந்து கொள்வதற்குஐபிஎ சமஸ்கிருதத்தின் 100 நன்னிமத்தமான பெயர்கள்.

ராதாவிற்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கோயில்கள்

  • வட இந்தியாவின், மதுரா மாவட்டத்தில் உள்ள பார்சானா மற்றும் பிருந்தாவனில் ராதாவல்லப் கோயில் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் ராதா மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின், டெக்ஸாஸில் உள்ள ஆஸ்டினில் காணப்படும் பார்சனா தாம் என்ற மேற்கு பூமியின் அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில்களுள் ஒன்றாகும்

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோயில் தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக முதலில் ராதாரணி என்றும் பின்னர் கிருஷ்ணர் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமதி ராதாராணியின் கருணையின் மூலம் கிருஷ்ணரை அணுக முடியும், அத்துடன் வேறு எவராலும் முடியாது. உதாரணத்திற்காக, ஒருவர் பிருந்தாவனில் உள்ள கோவிந்தாஜி கோயிலிற்குள் நுழைந்திருந்தால், தெய்வங்கள் ராதா கோவிந்தா என்று பெயரிடப்பட்டு இருக்கும், அத்துடன் கிருஷ்ணரின் பக்தர்கள் அவரை மட்டுமின்றி, ராதா மற்றும் கோவிந்தா ஆகிய இருவரையும் வழிபட்டிருக்க வேண்டும். ஏனெனில் ராதாராணியின் அன்பினால் கிருஷ்ணர் கட்டுண்டுள்ளார்.

ராதாவைப் பற்றிய மேற்கோள்கள்

  • இரவின் தொடக்கத்தில் நிலாவின் சுடரொளி மிகச்சிறந்ததாக இருந்தபோதும், பகல்நேரத்தில் அது மங்கிப் போனதாக இருக்கும். அதேபோல, பகல் நேரத்தின் போது தாமரை அழகாக இருந்தாலும், இரவு நேரத்தில் அது முடிவுறும். ஆனால், என்னுடைய நண்பர்களே, என்னுடைய மிகவும் அன்புக்குரிய ஸ்ரீமதி ராதாராணியின் முகம், இரவு மற்றும் பகல் இரண்டின்போதும், எப்போதும் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆகவே எதை அவருடைய முகத்துடன் ஒப்பிடுவது?” (விதக்த-மாதவா 5.20)
  • ஸ்ரீமதி ராதாராணி சிரிக்கும்போது, மகிழ்ச்சி அலைகள் அவர் கன்னங்களைக் கடந்து செல்லும், மேலும் அவரின் வில்லைப் போன்ற வளைந்த கண்புருவங்கள் அழகு மிக்க வானவில்லைப் போல் நடனமாடும். அவரின் கடைக்கண் பார்வையின் வசீகரம், மதிமயக்கத்தின் காரணமாக தடுமாறித் திரியும் பெரிய வண்டின் நடனத்தைப் போல இருக்கும். அந்த வண்டு என் இதயத்தின் நடுவில் இருக்கும் சிறிய வளையத்தை கடிப்பது போல இருக்கும்.” (விதக்த-மாதவா 2.51)
  • ஸ்ரீமதி ராதாராணி, கிருஷ்ணரின் மிகவும் அன்புக்குரியவர், அதேபோல அவரின் குளிக்கும் குளம் மிகவும் அருமை நிறைந்தது. அனைத்து கோபியர்களில், அவர் கடவுளின் மிகவும் அன்பிற்குரியவர்.” (பத்ம பூரணம்)
  • இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண் தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.” (பிரைஹட் கௌதமிய தந்திரம்)
  • கடவுள் மாதவனுள் ஸ்ரீ ராதா புகழ் பெற்றதைப் போல, அவர் துணையாக ஸ்ரீ ராதா அனைத்து மனிதர்களுக்கு மத்தியில், புகழ்பெற்று விளங்குகிறார்.” (ரிக்-பரிஸிஸ்தம்)

ருக்மணி

ருக்மணி (Rukmani) விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவாள். ருக்மணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன. திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் முதன்மையான மனைவி ஆவார். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன் ஆவார். பிரத்தியுமனனுக்கும், ருக்மியின் மகளான ருக்மாவதிக்கும் பிறந்தவரே அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார்ருக்மணி இலக்குமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

வரலாறு

ருக்மணியின் சகோதரன் ருக்மி தன் நண்பனும், சேதி நாட்டு அரசனுமான சிசுபாலனுக்கு தன் சகோதரி ருக்மணியைக் மணமுடித்து கொடுக்கத் தானாகவே முடிவு செய்ததால், ருக்மணி தமது துயரையும் தாம் கிருஷ்ணரின் குணங்களால் முன்னமே கவரப்பட்டவள் என்பதையும் தம்மை வந்து காப்பாற்றாவிடில் உயிரை விட்டுவிடப் போவதாக முடிவு செய்திருப்பதையும் கிருஷ்ணருக்கு செய்தியை தூது சொல்லியனுப்பினார்.

செய்தி பெற்று கவலையுற்ற கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு கிளம்பினார். மறுநாள் ருக்மணி, அம்பிகை பார்வதி தேவியின் திருக்கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டி பிரார்த்தித்து திரும்பும் வழியில், கிருஷ்ணர், ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றி கொண்டு துவாரகை திரும்பி திருமணம் செய்து கொண்டார்.

 

ஜாம்பவதி

ஜாம்பவதி, இராமாயண காவிய மாந்தரான ஜாம்பவானின் மகள். ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு மனைவியர்களில் இரண்டாமவர். கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த பத்து மகன்களில் முக்கியமானவரான சாம்பன், துரியோதனின் மகளான லட்சனாவின் கணவன் ஆவார்.

சூரியதேவன், யாதவ குல முக்கிய பிரமுகர் சத்யஜித்துக்கு வரமாக வழங்கிய, செல்வத்தை வாரி வழங்கும் சியாமந்தக மணியை, அவன் தம்பி பிரசேனன் அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றவிடத்து சிங்கத்தால் கொல்லப்பட்ட நேரத்தில், அவ்வழியே வந்த ஜாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று சியமந்தக மணியைக் கைப்பற்றி அதனை தன் மகள் ஜாம்பவதிக்கு அளித்தார்.

கிருஷ்ணர் பலமுறை கேட்டும் சியாமந்தக மணியை தான் தராததால், கிருஷ்ணரே தன் தம்பி பிரசேனனைக் கொன்று மணியை கவர்ந்ததாக சத்யஜித் வதந்தி பரப்பினான். தன் மீது விழுந்த வீண் பழியை துடைக்க, கிருஷ்ணர், பிரசேனன் வேட்டைக்கு சென்ற காட்டிற்குச் சென்று தேடுகையில், பிரசேனனும் ஒரு சிங்கமும் குகைக்கருகில் இறந்து கிடப்பதைக் கண்டார். மேலும் சியாமந்தக மணி பிரசேனனிடம் இல்லாததையும் கண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் இருந்த குகையில் சென்று பார்க்கையில் ஒளி வீசும் சியாமந்தக மணியையும், அதை வைத்திருந்த ஜாம்பவதியையும் கண்டார்.

கிருஷ்ணர் ஜாம்பவானுடன் மோதி வென்று, ஜாம்பவதியை திருமணம் செய்து கொண்டு, சியாமந்தக மணியை சத்யஜித்திடம் ஒப்படைத்தார். இதனால் மனம் மகிழ்ந்த சத்யஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.

 


No comments:

Post a Comment