Saturday, May 28, 2022

திருப்பதியில் லட்டு ஏன் பிரசாதமாக கொடுக்க படுகிறது

 

திருப்பதியில் லட்டு ஏன் பிரசாதமாக கொடுக்க படுகிறது  என்பதற்கு ஒரு வரலாறு:

தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீடுக்கு செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால், முதலில் 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப் பட்டது. சரித்திர காலம் முதல் பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்க பட்டு வருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்களின் எண்ணிக்கை பலவாக பெருகியது.

 

          சேகர மல்லாண்ணன் என்கிற அமைச்சர் பல வகையான தானங்களை வழங்கினார். அப்போது தான் *ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்* எனும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள் தான் பக்தர்களின் பசியை போக்கும் அருமருந்தாக இருந்தன. பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் 'திருப்பொங்கல்' என்று முன்பு அழைக்கப்பட்டது...பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்ய பட்டன. இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாள்கள் தாங்காது. 1803-ம் ஆண்டிலிருந்து லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி, இனிப்பு பிரசாதமாக வழங்க பட்டது. அந்த பூந்தி தான் லட்டாக உருப்பெற்றது.

                     ஏழுமலையானுக்குபிரசாதங்களைத் தயாரித்து பூஜைக்கு வழங்கியவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர்.* லட்டை அன்றாட பிரசாதமாக்கியவரும் இவர் தான் என சொல்ல படுகிறது.

கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன் இவர் பூதேரி என்ற கிராமத்திலிருந்து" தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்குகைங்கர்யம் செய்ய தம்மையும் தம் குடும்பத்தையும் ஈடுபடுத்தி கொண்டவர்.

 

       ஒரு நாள் பெருஞ்செல்வம் படைத்த வியாபாரி ஒருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றினால், மலை போன்ற பிரமாண்டமான லட்டை தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டி கொண்டாராம். பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானது தான் லட்டு பிரசாதம். முன்னர் மிராசுதாரர்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஊதியமாக லட்டுகளே தரப்பட்டன.

No comments:

Post a Comment