Monday, May 23, 2022

ஓய்வு Retirement

 ஓய்வு Retirement

ஓய்வு Retirement ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது இறைவனுடைய கருணையினால் நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும்.*
*ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்திவிடுவார்கள்..*
*நாம் செய்த வேலையை எப்படி மனதார விரும்பி வாழ்ந்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும். இல்லையா? பிடித்ததுபோல் நல்ல அழகாய் உடை அணியுங்கள்.*
*சில நண்பர்கள், ஓய்வு பெற்ற பிறகும் உடம்பில் சக்தி இருக்கும்வரை வேலைக்கு போகலாம் என்று கையில் அதிகம் காசிருந்தும் மீண்டும் வேலையை எங்கோ தேடிக்கொண்டு தொடர்வதை மட்டும் பார்க்க முடிகிறது*
*அது ஏன் என்று மட்டும் புரிவதே இல்லை. மீண்டும் இந்த பணத்தை சேர்க்க யாருக்காக துரத்துகிறீர்கள்? மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம்*
*ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, இருந்தாலும் அந்த பணத்தை நோக்கி துரத்தி கொண்டு ஓடுகிறார்கள். ஓய்வுக்கு பின் நமக்கானா வாழ்க்கையை இனியாவது வாழ்வோம் என்று கொஞ்சமும் ஆசை இல்லாமல்*
*உங்களுக்கு பிடித்த வேலையை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். உங்களுக்கு குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம்.. உங்களுக்கு கதை கட்டுரை ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.*
*இதுவரை ஓடிய நாட்களில் பார்க்கமுடியாத இடங்களை பாருங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு நேரத்துக்கு நன்றாக தேவையான செரிமானம் ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள்*
. *கொஞ்சம் நம்முடைய பழைய நண்பர்கள், உறவுகளுடன் மனம் விட்டு பேசுங்கள். இதில் அவர்கள் பேசவே செய்வதில்லை நாமே பேசுகிறோம் என்று ஈகோ பார்க்க வேண்டாம்.*
*அதிகாலையில் எழுந்திருங்கள் வாய் விட்டு நிறைய சிரியுங்கள். உங்கள் காலத்து நண்பர்களோ, பிடித்த, கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது மறக்காமல் எல்லாவற்றையும் பேசுங்கள் அல்லது அவர்களை நேரில் சந்தியுங்கள் .*
*மிக மிக நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும் துக்கங்களையும் பகிருங்கள். அப்படி இருந்தால் நம் துக்கம் ஒன்றுமில்லை என்று நமக்கு தெரியும்*
*தேவையான உடற்பயிற்சியினை இயன்றவரை செய்துவிடுங்கள், நேரத்துக்கு மருந்தை உட்கொள்ளுங்கள். நம் நண்பர்கள், நம் உறவினர்கள் எங்கோ ஒருவர் இறப்பார்கள். அடுத்து நாம் தான் என்று ஒருபோதும் பயப்படாதீர்கள். அந்த வரிசை கடவுளிடம் மட்டுமே இருக்கிறது.*
*டாய்லெட் கதவுகளை பூட்டிக்கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக்கொள்ளுங்கள்.*
*தெரியாதவர்களுக்கு கதவைத்திறக்காதீர்கள்.*
*சேர்த்துவைத்த பணத்திற்காகவோ, பென்ஷன் பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால், காபி கொடுத்து அனுப்பிவிடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் வங்கியில் போட்டு வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.*
*பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள்*. *உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.*
*வேலையை விட்டுத்தானே ஓய்வு பெற்றோம்? இறந்தா போய்விட்டோம் இல்லையே. அப்புறம் ஏன் கவலைபடுகிறீர்கள்?*
*இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல... அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்..!*
*ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு உரிய மரியாதையையும், சுதந்திரத்தையும்... அவர்களின் ஓய்வில் எவ்வித மன உளைச்சலும் ஏற்படுத்ததாத வகையில்.., பெற்றோர்களின் உடல், மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.*
*வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்... பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து, பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமை தாங்கியாக தங்களது வாழ்வை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம் நமக்களித்த வரம் இது...*
*இதையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுய நலத்திற்காக இழக்காதீர்கள்*.
*எப்போதும் இறைவழிபாடு செய்யுங்கள். நல்லது இனிதே நடக்கும். இறைவனிடம் உங்களை ஒப்படைத்து விட்டு உங்கள் பணியை செய்துகொண்டே இருங்கள். நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியத்தை இறைவன் கொடுப்பான்*
*வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!
வாழ்க பல்லாண்டு!*

No comments:

Post a Comment