Monday, February 20, 2023

கவலையின்றி வாழ

 கவலையின்றி வாழ

கவலையின்றி வாழ வேண்டுமானால் பற்று இருக்கக் கூடாது !!!*

*அதே சமயம், பற்றுதல் இன்றி வாழ நீங்கள் 10 படிகளை நாம் கடந்தாக வேண்டும் !!!*

   *1. "எல்லாமே இங்கிருந்துதான் எடுக்கப்பட்டவை"*

    *2.* "அனைத்தையும் இங்கேயே விட்டுச்செல்ல வேண்டும் !!!" 

 *"காதறுந்த ஊசியும் உடன் வராது"*

    *3.* எதை நான் *"இழந்தேன்"* என்கிறாயோ ... அது உன்னுடையதல்ல. உன்னுடையது அல்லாதவைகளை, நீ எப்படி இழந்திருக்க முடியம்? ஆக, *இழக்காத ஒரு பொருளுக்கு நீ  அழக்கூடாது."*

    *4.* எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது ஆகிறது  ஆம் !!! மானிடா !!! 

 *"இழப்பதற்காகவே நீ பொருட்களை பெறுகின்றாய்.*

    *5.* உனக்கென்று எதுவும் நிரந்தரமாக சொந்தமில்லை !!!  

 *"எல்லாமே சில காலம்தான்"*

    *6.* இந்த பிரபஞ்சத்தில் நீ மிகச்சிறிய தொரு துளியே ஆவாய்.

    *7.* முடிவும் தொடக்கமும் இல்லாத, என்றுமே இருந்து கொண்டே இருக்கக்கூடிய காலத்தில், நீ வாழ்ந்த கால இடைவெளியானது, மிகச்சிறிய தொரு துளியே ஆகும்.

    *8. நீயும், நானும், என எல்லோருமே எதிர்காலத்து உலக மக்களால் மிக விரைவில் மறக்கப்பட வேண்டியவர்களே" !!!*

    *9. அனைத்து உறவுகளும் பொருட்களும் உன்னுடலும் மனமும் இவையெதுவுமே நீயல்ல". இவையாவும், உன்னிலிருந்து வேறானவை !!!*

    *10. என்றுமே அழியாதிருக்கும் உயிராகிய ஆத்மாவே நீயாவாய் என்று மனமே நீ புரிந்து கொண்டு விடு !!!*

   

இந்த பத்து படிகள் தான் நம்மனதுக்கு தேவைஇவற்றை நம்மனதில் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்துணரும்போது, ...  இந்த உடமைகளின் மீதுள்ள ... *"என்னுடையது"* என்கிற உணர்வு மறையத் தொடங்குகின்றது !!!

 *உடனே பற்றுதலும், கவலைகளும் தானாக மறையத் தொடங்குகின்றன !!!*

 

No comments:

Post a Comment