Wednesday, February 22, 2023

மன நோய்க்கு தீர்வு

 மன நோய்க்கு தீர்வு


யாரையும் இழிவுப்படுத்த வேண்டாம்... விட்டு விடுங்கள்...

குடும்பம் இல்லாதவர்களை கேவலமாகவும் இழிவாகவும் பார்க்காதீர்கள்.. ஏனென்றால் உங்களைப் படைத்தவன் உங்களைத் தனிமரமாக்கிப் பார்க்க ரொம்ப நேரம் ஆகாது.

அவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்கும் அவர்களை நிம்மதியாக விட்டு விடுங்கள்.

ஒரு தம்பதி 50 வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

ஒரு பெண் பலகாலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

திருமணம் முடிந்து 5 ஆண்டுகள்

ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்

கொள்ளவில்லையா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

அவன் 30 வயதைக் கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்

அலைந்துக் கொண்டிருக்கிறானா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

அவள் பேரப்பிள்ளைகளை கண்டப் பிறகும், தன் கணவனோடு

கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்.

அவன் கல்விக்காக வெகு தொலைவில் சென்று தனியே தங்கியிருந்து படிக்கிறானா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்.

அவரவர் அவர் விரும்பியவாறு

வாழ்ந்துக் கொள்ளட்டும்... அவர்களுக்கு

வெளியில் சொல்ல முடியாத உங்களால் கற்பனை பண்ண முடியாத அளவு சோகங்களும், துயரங்களும் இருக்கும்.

அவர்களைக் கண்டால், கொஞ்சம்

புன்னகையுடன் உரையாடுங்கள்.

முடியாவிட்டால், மௌனமாக

கடந்து விடுங்கள்...

அது போதும்...

உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..

அவர்களது வாழ்க்கை

அவர்களுக்கானது..

புறம் பேசி அலைவதை விட, இத்தகைய

மன நிலை அமையப் பெற்றால் நாம் நிச்சயமாக உயர்தவர்கள் தானே

No comments:

Post a Comment