Monday, February 20, 2023

ஓய்வுப் பெற்ற மூத்தக் குடிமக்கள்

 ஓய்வுப் பெற்ற மூத்தக் குடிமக்கள்

 

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற மூத்தக் குடிமக்கள் இதைப் பின்பற்றினால் வாழ்வின் கடைசிப்பக்கங்கள் மிகவும்

சுவராசியமாகவும்  இனிமையாகவும் இருக்கும்.

எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசிப் பகுதியில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள்.  (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிப் போகும்)

உங்கள் பேரக் குழந்தைகளின் மேல் எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.

குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ, எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.

உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். விலகியே  இருங்கள். உறவு இனிமையாக இருக்கும்.

என் பிள்ளை, என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்தப் பறவைகள் அவர்கள் என்பதை

நினைத்து அமைதியாய் இருங்கள். சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை  உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம். காலம் முழுவதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு, பல இழப்புகளைச் சந்தித்து இருப்பீர்கள்.  அவற்றை சொல்லிக் காட்ட வேண்டாம். உங்கள் கடமையைச் செய்தீர்கள்.. அவ்வளவே.. 

கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்துப் போன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள். தேவைப்பட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக இருந்து வாங்க. அங்கே அதிகம் தங்க வேண்டாம்.

எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை/கணவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்துப் பேசினாலும் எதிர்குரல் கொடுங்கள்.

அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றிச் சொல்லி அவமானப்பட வேண்டாம். அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள்  குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். உங்கள் அறிவுரைகளைத் தவிருங்கள்.

உங்களை விட அறிவிலும் திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாளகவே நடியுங்கள். அப்பொழுது தான் பிழைப்பீர்கள்.

அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது. நீங்கள் நன்குப் படித்திருந்தாலும், நல்ல பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகள் மற்றும் தலையாட்டும் பொம்மைகள் தான்

No comments:

Post a Comment