Monday, February 20, 2023

இறுதிச்சடங்கில் ஏன் பங்கேற்க வேண்டும்

 இறுதிச்சடங்கில் ஏன் பங்கேற்க வேண்டும்

 

*மனிதன், ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்.?*

 

    *"மரணம்" உன்னதமானது.! அதை உணரும் போது... உயிர் உடலில் இருக்காது.!*

 

    *ஒரு மனிதன், எப்போது அச்சம் கொள்கிறான்.?*

 

*இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்.*

 

    *உலகின் வேறு எதுவும் , மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.!*

 

   *நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மைத் தோளில் சுமந்த தந்தை, நாம் தூக்கி வளர்த்த பிள்ளை, நமது இன்ப துன்பங்களைப் பகிர்ந்த வாழ்க்கைத் துணை, நம்முடன் சுற்றித் திரிந்த நண்பர்கள், இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்.!*

 

   *ஒருநாள் நமக்கும் மரணம் இருக்கிறது என்ற எண்ணமே.... நம்மை ஆட்டிப் பார்க்கிறது.!*

 

    *மனதுக்கு நெருங்கியவரை குழிக்குள் இறக்கி  மண்ணிட்டு மூடும் போது .. வரும் வெறுமை...!*

 

    *நமது தலையில் சேர்த்து வைத்திருக்கும்  புகழ், ஈகோ, அகந்தை, கர்வத்தையும்  சேர்த்து, அனைத்தையும் மண்ணோடு மூடிவிடும்.!*

 

    *ஒரு மரணத்தைக் காணும் போது ... மனம் இறங்க வேண்டும்.!*

 

    *"மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் தான்.. ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.!"*

 

    *பணம் மீது தீராத வெறி, பதவி மீது தீராத வேட்கை, இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.!*

 

    *ஒவ்வொரு மரணத்தைக் காணும் போதும்.. நம் மனதில் இருக்கும்  வஞ்சம், பகை, ஈகோ, போன்றவற்றை மறக்க அல்லது குறைக்கவாவது வேண்டும்.!*

 

    *ஒரு பிரேதம் மண்ணில் அடக்கம் செய்யும் போது .... வஞ்சம், பகை, ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும்.!*

 

    *மரணத்தின் எண்ணம்நம் இறை அச்சத்தை அதிகரிக்கும்.!*

 

      *மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம், மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும்போது... நம் மனமும்  அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.!*

 

     *மண்ணின் இயற்கை சுழற்சியை ஒழுங்கு செய்யும் ஒரே விஷயம் மரணம் மட்டுமே.!*

 

     *மரணத்தை நேசிப்போம்! காரணம்., நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்ட பரிசாக மரணம்தான் காத்திருக்கிறது.!*

 

     *மண்கலம் கவிழ்ந்த போது... வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்த போது... வேணும் வேணும் என்று பேணுவார்! நன்கலம் கவிழ்ந்த போது... நாறும் என்று மண்ணுக்குள் போடுவார்.!*

 

     *மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் .... அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்..!*

 

  *வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் ....அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.!*

 

*ஆனால் .....,*

 

    *நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது .... அதனைப் பிணம் என்று இகழ்ந்து... அது கிடந்தால் நாறும் எனக் கூறி, குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்..!*

 

     *இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத  எண் சாண் உடம்பில் ,உயிர் இருக்கும் போதே.., நம்மால் இயன்ற நல்லதை மற்றவர்களுக்கு செய்வோம்...! நாமும் வாழ்ந்து.. பிறரையும் வாழவைத்து... மனநிறைவு கொள்வோம்..!*

No comments:

Post a Comment