Thursday, December 16, 2021

கசக்கும் உண்மைகள்..

 *1.* கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,

*உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!*

 *(நம்ம ஊரு டிசைன் அப்படி)*

 *2.* கும்பிடும் வரை கடவுள்;

*திருட்டுப் போனால் சிலை...!**(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*

 *3.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*  *(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*

*4.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் 

*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*  *(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*

 *5.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது 

*ஒரு தீ குச்சியின் மரணம்..!* *(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*

 *6.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட 

*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!

*(நிதர்சனமான உண்மை)*

  *7.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!* *(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*

 *8.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!*  *(எல்லாம் பீஸ் தான் காரணம்)*

 *9.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*

 *(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*

 *10.* 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் 

*இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!*

 *(லஞ்சம் தான் காரணம்)*

 *11.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்

*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!* *(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)*

 *11.* தூக்கம் வராமல் முதலாளி... 

*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!**(கரன்சி பண்ற வேலை)*

 *13.* கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..!

*கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் கூட ? உங்களுக்குத் தெரியப்போவதில்லை...!* 

*இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை*

 படித்ததிலிருந்து பிடித்த *மனதை நெ௫டிய* ஒரு பதிவு ..

 

No comments:

Post a Comment