Monday, December 13, 2021

நம் வாழ்க்கை நம் கையில்

 நம் வாழ்க்கை நம் கையில்

நம் வாழ்க்கை நம் கையில்நாம் எவ்வாறு நல் வழிகளை பின்பற்றுகிறோமோ அவ்வாரே நமக்கு நன்மைகளும் கிடைக்கும்.

 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், யாரெல்லாம் நம்மிடமிருந்து விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.!*

 *அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் இதை முடிவு செய்கிறது.*

 *வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.*

 *யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.*

 *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.!*

 *வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

 *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்...*  

*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*

 *பணம் இருந்தால் அவனை உயர்ந்தவனாக கருதும் இவ்வுலகம்*  

*குணம் இருந்தாலும் பணமில்லை என்ற* *காரணத்தால் அவனை* *குப்பையாகவே அடையாளம் காண்கிறது.*  

  *நடிப்பவனை நல்லவனாகவும்*  

*உண்மை பேசுபவனை* *பைத்தியக் காரனாகவும்*  

*அன்பு காட்டுபவனை* *ஏமாளியாகவும் சித்தரிக்கும் இவ்வுலகம்* *இப்பேருண்மையை*  

*எடுத்துச் சொல்பவனை மட்டும்* *கோமாளியாகவும் பார்க்க தவறுவதில்லை..!*

 *இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து அதன் பொருட்டு *சோதனைகளை ஏற்படுத்தி*  

*பக்குவத்தையும்,* *நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.!*

 *நிலவை....*  *தூரத்தில் இருந்து ரசிப்பதை போல...*  

*சில உறவுகளையும் தூரத்திலிருந்தே ரசிக்க கற்றுக் கொண்டோமானால் சில வலிகளாவது இல்லாமல் இருக்கும்.*

 *தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதிடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே நம் ஆயுதமாக வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.!*

 *அவர்களுக்கும் புரியவைக்க வரும் காலம் என்ற ஒன்று உள்ளதால் சிந்தித்து செயல்படுவதே நமக்கு நல்லது*

 **இதுவும் கடந்து போகும்.**

 *இவ்வுலகில் எதுவுமே நிலையென்று ஒன்றுமில்லை.*

 *ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*

 *யாரும் நம் கண்ணீரை பார்ப்பதில்லை.!*  

*யாரும் நம் கவலைகளை பார்ப்பதில்லை.!!*  

*யாரும் நம் வலிகளை பார்ப்பதில்லை.!!!*

 *ஆனால் எல்லோரும் நம் தவறை மட்டும் பார்க்க தவறுவதில்லை.*

*மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.*

 *தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.*

 *தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*

 *நான் படித்ததில் பிடித்தது அருமையான வரிகள்*

No comments:

Post a Comment