Sunday, February 4, 2018

மும்பை டப்பாவாலாக்கள்:


மும்பை டப்பாவாலாக்கள்:



               காந்தி குல்லாவுடன் மும்பையில் டப்பாவாலாக்கள் மும்பை பரபரப்பில் தவிர்க்க முடியாத முக்கிய மனிதர்கள் ஆவார்கள். அலுவலகத்தில் பணியாற்றும் மும்பை மக்களுக்கு உணவு வழங்கும் அட்சய பாத்திரங்களாக திகழ்கின்றனர் இந்த டப்பாவாலாக்கள். இவர்கள் 70,000 பேர் பணியில் உள்ளனர். மாதம் ஒன்றுக்கு வீட்டிலிருந்து சம்பந்தப்பட்டவர் பணியாற்றும் தூரம் எவ்வளவு என கணக்கிட்டு ரூ. 300லிருந்து ரூ. 500 வரை ஊதியத் தொகையாகப் பெறுகின்றனர். சரியாக காலை 10.00 மணியளவில் உணவுப் பாத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, மதியம் 1.00 மணிக்கு சம்பந்தப்பட்டவர்க்கு தாமதம் இல்லாமலும், பாத்திரங்களை மாறாமலும் ஒப்படைத்து விடுவார்கள். இதில் 3 பகுதியாக பணியைப் பிரித்துள்ளனர்; அவை முதல் டீம் வீடுகளில் இருந்து உணவுப் பாத்திரங்கள் பெறுவது, இரண்டாவது டீம் பெருநகர் ரயில்வே மூலம் எடுத்துச் செல்வது, மூன்றாவது டீம் குறிப்பிட்ட அப்பகுதியின் பொறுப்பாளர் பெற்று அதை விநியோகம் செய்வது.
                                 டப்பாவாலாக்கள் இதுவரை வேலைநிறுத்தம் செய்யவில்லை. டப்பா வாலாக்கள் சுறுசுறுப்பு, காலதாமதம் இல்லாமல் பணியாற்றுவது, சேவை அர்ப்பணிப்பு என்ற பெருங்குணங் கொண்ட இவர்கள் பாராட்டப்பட வேண்டும். நூற்றாண்டுகளாக இப்பணி தொடர்கிறது.

No comments:

Post a Comment