Friday, February 2, 2018

சர்க்கரை நோய் குறைய..!



சர்க்கரை நோய் குறைய..!


சீந்தில் கொடிச்சாறை வெந்நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நீரழிவு நோய் குறையும்..
பாகற்காய் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு குறையும்.
முட்டைக்கோஸ் அதிக அளவில்சாப்பிடவும்.
பப்பாளி, நாவற்பழம் இரண்டையும் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்
வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்னீரில் ஊறவைத்து காலையில்  நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை  குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
மாதுளம் பழத்தோலை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை , மருதம்பட்டை மூன்றையும் காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க நீரிழிவு நோய் குணமாகும்..
ஆவாரம் பூக்களை  சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குறையும்.
வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் அரை கரண்டி அளவு வாயில் போட்டு தண்ணீர் அருந்த சர்க்கரை நோயை குறைக்கலாம்.
தினமும் ஒரு கோவைப் பழம் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் பொடி செய்து பாலில் கலந்து குடிக்க  சர்க்கரை நோய் குறையும்
சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து சலித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்..
நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்..
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
நீரில் துளசி இலை, வில்வ இலை மற்றும் வேப்பிலைகளை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி காலையில் குடித்து வந்தால் நீரிழிவு குறையும்..
மஞ்சள், நெல்லி பொடி இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

No comments:

Post a Comment