Friday, January 5, 2018

நலம் அளிக்கும் வாழைப் பூ!



நலம் அளிக்கும் வாழைப் பூ 


நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பூ, வாழைப் பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ளவையே. வாழைப் பூவின் துவர்ப்புச் சுவை நாம் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைப் போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக் கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள்.
 
துவர்ப்பு இருந்தால் சுவையிருக்காது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச்சத்து வீணாகாமல் உடம்புக்கு வைட்டமின் 'பி' கிடைக்கிறது. பல வியாதிகளும் நிவர்த்தி அடைகின்றன. தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப் பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினை சுரக்கச்செய்யும். சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

 
மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதை ரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப் பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் வெகு விரைவில் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்.

 
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும். அவர்கள் வாழைப் பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து வடி கட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்திவந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். பெண்களுக்கு வாழைப் பூவை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.


     !


No comments:

Post a Comment