Friday, January 5, 2018

மோர்:


மோர் 
:


இந்திரனுக்குக் கூட கிடைக்காத அற்புதம்என்கிறது ஆயுர்வேதம் இதை.

ஆதிகாலத்தில் நம்மவர் தயிர் சாப்பிடுவது குறைவு. ஆனால் மோர் நிறையக் குடிப்பர். சித்தர் தேரையர் கூறுகிறார் தண்ணீரைவிட மனிதர் மோர் கூடுதலாகக் குடிக்க வேண்டுமென்று. மோர் குடித்தால் உடற்சூடு தணிக்கப்பட்டு மேலும் அதிலள்ள உடலக்குத் தேவையான நுண்ணுயிர்கள் (friendly bacteria) எமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன.

மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது.

மூலநோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

தேவையான பொருள்கள்:

தயிர் ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
இஞ்சி சிறு துண்டு
கறிவேப்பிலை – 4,5 இலை
கொத்தமல்லி சிறிது
பச்சை மிளகாய் – 1/2
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

விரும்பினால்..

வெள்ளரி – 1 துண்டு
கேரட் – 1 துண்டு
மாங்காய் – 1 துண்டு

செய்முறை:

புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக்கொள்ளவும்.

இஞ்சி, கறிவேப்பிலை, கொத்த மல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட், மாங்காய் எல்லாவற்றையு ம் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரை ச் சேர்த்து நன்கு டீ வடி கட்டியில் வடிகட்டவும்.

வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.

மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எல்லா வேலைகளுக்கும் அம்மி ஆட்டுரல் என்று பழைய பொருள்க ளை நாடினாலும், தயிர் கடைவதில் மட்டும் மத்தை விட மிக்ஸி மிக மிகச் சுவையான மோரைக் கொடுக்கும்.

* வெயில் காலத்தில் இதைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொ ண்டால் மதிய வேளைகளில் தேவைப்படும் பொழுதெல்லாம் எடு த்துக் குடிக்கலாம். ஆடை நீக்கிய தயிர் அல்லது வெண்னை எடுத்த மோர் என்றால் நலம்.

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

 

No comments:

Post a Comment