Saturday, January 22, 2022

சிந்தனைக்கு சில துளிகள்

   "சிந்தனைக்கு சில துளிகள் "

 

  ' இன்முகத்துடன் எதிர்கொண்டால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்  ஆனால் அதேசமயம் அமைதியாக இருந்துவிட்டால் பிரச்சினைகளை அறவேத் தவிர்க்கவும் முடியும் '

  ' எவ்வளவு தான் அல்லல்பட்டாலும் கடிதங்கள் சரியான விலாசத்தை சென்றடைகின்றன ;  அதுபோன்றே எவ்வளவுதான் அவமானப் பட்டாலும்  நம்பிக்கை கொண்டு உறுதியாக இருந்தால் வெற்றி எனும் இலக்கை அடைய முடியும் '

     ' நேராக வளரும் மரமே முதலில் வெட்டப் படுகிறது ;   அதுபோல் நேர்மையானவர்களே அதிகம் காயப்படுத்தப் படுகிறார்கள் '

     ' தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தாதவரை; வாழ்வில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வது கடினம் '

   என்ன இக்கருத்துக்கள் நம் வாழ்கை பொலிவுபெற நிச்சயம் உதவும்தானே   



No comments:

Post a Comment