Saturday, January 15, 2022

குட்டிக்கதை

 குட்டிக்கதை

பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர்  எல்லார் கையிலும்  ஒரு  பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் அதை இன்னொரு அறையில் குவியலாக போட சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர்,  உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

 உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து  அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர்  ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து  தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும்  ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. 

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்என்றார். அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்

இது தான் வாழ்க்கை.எல்லோரும்  மகிழ்ச்சியை தேடுகிறோம்ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’. ’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,

உங்கள் மகிழ்ச்சி தானாக உங்களை தேடி வரும்...!

 படித்ததில் பிடித்தது

 

No comments:

Post a Comment