Wednesday, January 26, 2022

கருங்காலி மரம்

 கருங்காலியில் உள்ள மருத்துவமும், மந்திரமும்

           ஆன்மீக ரீதியாக கருங்காலியானது கண் திருஷ்டியில் இருந்து நமக்கு பாதுகாப்பு கொடுக்கும். கெட்ட சக்திகள் எதுவும் கருங்காலி இருக்கும் இடத்தில் அண்டாது. கருங்காலி மிகச்சிறந்த கிருமி நாசினியும் கூட. தண்ணீரில் கருங்காலி குச்சிகள் சிலவற்றை ஊறவைத்து அதை நாம் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு கூட கருங்காலி தண்ணீரை மருந்தாக பல சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

            மேலும்  இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று வந்தால் கருங்காலி உலக்கையை தாண்டி வீட்டிற்குள் வரவேண்டும் எனும் வழக்கம் அன்று பல கிராமங்களில் இருந்தது. கருங்காலி ஒரு கிருமி நாசினி அதனால் தான் இந்த முறையை பலர் அன்று கிரமங்களில் பின்பற்றினார்கள். மேலும் கருங்காலியில் பிரபஞ்ச சக்தி அதிகம் உள்ளது. அதனால் தான் தவம் செய்யும் முனிவர்கள் கைத்தண்டமாக கருங்காலியை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள், குறி சொல்பவர்களும் கருங்காலி கோலை பயன்படுத்துகிறார்கள்.அன்று நாடாண்ட மன்னர்கள் கைகளில் இருந்த செங்கோல் செங்கருங்காலியில் செய்த கோல் தான். மேலும் கருங்காலி, செங்கருங்காலி மாலையில் மின்காந்த சக்தி அதிகம் உள்ளது.

                  அதனால் கருங்காலி மாலையை அணிந்து கொண்டால் நம் ஆரோக்யம் சீராகும், நரம்பு மண்டலங்கள் சீராகும், நம் ரத்த ஓட்டம் சீராகும், ரத்த ஓட்டம் சீரானால் எண்ணம் சீராகும், எண்ணம் சீரானால் நம் வாழ்க்கையும் சீராகும்.  கருங்காலி குறித்து சொல்ல இதுபோல் பலப்பல விஷயங்கள் உள்ளது  கருங்காலி மாலையை கொண்டு அடுத்து நடக்க இருப்பதை சரியாக யூகிக்க முடியும்.

No comments:

Post a Comment