Sunday, January 9, 2022

கொரோனா ஒழுக்கமானது தான்.

 கொரோனா ஒழுக்கமானது தான் 

*1) கொரோனா தன் கையில் கால்குலேட்டருடன்தான் சுற்றித் கொண்டிருக்கும், திருமண விஷேசங்களுக்கு வரும் 51-வது நபரைத்தான் தாக்கும்.*

*2) இறப்பு போன்ற காரியங்களுக்கு வரும் 26-வது நபரை மட்டும் விரும்பும் .*

*3) பேருந்துகளில் நின்று கொண்டு பயணிப்பவர்களை மட்டும் ஓடிப்போய் பிடித்துக் கொள்ளும். ஆனால் உட்கார்ந்து இருப்பவர்களை ஒருபோதும் கண்டு கொள்ளாது.*

*4) காரில் பயணம் செய்யும் 5வது நபரையும், ஆட்டோவில் பயணிக்கும் 4வது நபரை மட்டுமே குறி வைக்கும்.*

*5) காந்தி அடிகளாருக்குப் பிறகு மதுவை வெறுக்கும் ஒரு உத்தம பிறவிதான் நமது கொரோனா, ஆமாங்க கொரோனாவை சுட்டுப் போட்டாலும் TASMAC கடைகள் பக்கம் தன் பார்வையை கூட திருப்பாது, கண்டுக்காமல் போய்விடும்.*

*6) முக கவசம் அணிந்தவர்களிடம் முகம் காட்டாது சென்றுவிடும்.*

*7) நீல அகலம் அளக்கும் 'டேப்'புடனேயே சுற்றும் கொரோனா சமூக இடைவெளி சரியாக 6 அடி விட்டு நிற்கும் நபர்களை தொடாமல் தாண்டி போய் 6 அடிக்கும் குறைவான இடைவெளியில் நெருக்கமாக நிற்கும் நபர்களை மட்டும் பழி வாங்கும்.*

*8) கொரோனா தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் அலாதி பிரியம் கொண்டுள்ளது. ஆகவேதான் 24 மணி நேரமும் சலூன் மற்றும் அழகு நிலையங்களில் அமைதியாக அமர்ந்திருக்கும்.*

*9) கடவுள் மீது கொரோனாவுக்கு அளவு கடந்த பக்தி ஆகவே அனைத்து வழிப்பாட்டுத் தளங்களிலும் கொரோனா வாழ்ந்து வருவதோடு, வழிபாட்டுத் தளங்களின் ஊழியர்கள் தவிர யார் வந்தாலும் உடனே கொரோனா அவர்களை கபளீகரம் செய்து விடும்.*

*10) நேரத்தைக் கடைப் பிடிக்கும் வல்லமை கொண்டது கொரோனா, ஆமாங்க தினம்தோறும் இரவு 10.00 மணி வரை யாரையுமே கண்டு கொள்ளாத கொரோனா மிகச்சரியாக இரவு 10.01 க்கு வெளியில் திரியும் நபர்களை மிக லாபகமாக பிடித்துக் கொள்ளும்.*

*11) தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களை எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் திரும்பி கூட பார்க்காது.*

*12) அனுதினமும் AC-யிலேயே வாழும் கொரோனா, AC பயன்படுத்தாத கடைகள் பக்கத்தில் செல்வதற்கே மிகவும் அஞ்சும்.*

*13) கிருமிநாசினி மீது கொரோனவிற்கு மரியாதை கலந்த பயம், ஆம், கிருமி நாசினி பயன்படுத்தியவர்கள் அருகில் செல்லவே செல்லாது.*

அதனால தாங்க சொல்றேன் கொரோனா மிகவும் *ஒழுக்கமானது* என்று.

*படித்ததில் பிடித்தது*

No comments:

Post a Comment