Friday, January 21, 2022

சிந்தனை

 *இன்றைய சிந்தனை*

                              வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ நாம் தான்.. ஆனால்.. நமக்கான வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்தோமா.  என வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால்.. பெரும்பாலும் மிகப் பெரிய வெறுமையே  மிஞ்சும்....!!!!! எதையும் சிந்தித்துத் செய்தால் நமக்கு கிடைப்பது *வெற்றி*.. எதையும் செய்து விட்டு சிந்தித்தால் நமக்குக் கிடைப்பது *அனுபவம்*....!!!! கடந்து போகும் நொடிகளில் எல்லாம் வாழ்வது மட்டும்  வாழ்க்கை இல்லை... கடக்க முடியாத நொடிகளில் வீழாமல் வாழ்வதே வாழ்க்கை.....!!!!!

 

மரணத்திற்குப் பின்  வாழ்வு உண்டாஎன்பதல்ல கேள்வி....

உயிரோடு இருக்கும் போது வாழ்ந்தாயா என்பதே கேள்வி....!!!!

என்னென்ன பெற வேண்டும் என்று தேடுவதை விட்டுவிட்டு.....

எதை எதை விடவேண்டும் என்பதைச் சிந்தியுங்கள்....!!!!

விரைந்து வந்தேன் என்பதில் இல்லை...வீழ்ந்தாலும் எழுந்து 

வந்தேன் என்பதில் உள்ளது நம் பெருமை......!!!!

 

பழி வாங்குவதற்கு நமது மன அமைதியை விலையாகக் கொடுப்பதற்குப் பதிலாக... மன்னிப்பது மேல் அல்லவா....!!!!!  தவறை திருத்திக் கொள்வதில்.. அவமானம் கிடையாது....,!!!!!  தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்.. சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்.. பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..  இவர்களுடன் இருப்பதை விட.... அனாதையாக வாழ்வது மேல்....!!!!

 

வெளிப்படுத்திய அன்பிற்கே விலை மதிப்பில்லாதபோது. புதைத்து வைத்திருக்கும்  அன்பை... புரிந்து கொள்ளவில்லை.. என்று வருத்தப்படுவது அர்த்தமில்லாத ஒன்று.....!!!!! ஒவ்வொரு நாளையும்  அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள்.. ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்.....!!!! வாழ்க்கையில் முற்னேற.... குன்றாத உழைப்பு.. குறையாத முயற்சி..  வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை.  இம்மூன்றும் இருந்தால் போதும்....!!!!  விலை மதிப்பில்லாத  *அன்பை* எல்லா இடத்திலும் கொட்டாதீர்கள்.... சிலருக்கு அது குப்பையாகத் தெரியும்......!!!!!!

எத்தனை வலி வந்தாலும் அழாதே.... உன்னைக் கேலி செய்பவன் முன் சிரித்துக் கொண்டே இரு..  அளவிற்கு மீறிய கோபம் வந்தால் மெளனத்தை கடைப்பிடி... உன்னை அலட்சியம் செய்பவர்களிடமிருந்து விலகி நில்....உன்னிடம் அன்பு காட்டினால் நன்றி மறவாமல் இரு....யார் மனமும் புண்படும்படி பேசாதே.....

இவ்வளவு தான் வாழ்க்கை....!!!

எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

முகக்கவசம் உயிர்க்கவசம்.

 

No comments:

Post a Comment