Friday, January 21, 2022

சனி பகவான்

 சனி பகவான்

                        ஜோதிட உலகத்தில் இருக்கும் நவ கிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகமாகிய "சனீஸ்வரர் பகவானை"  பற்றிய ஆன்மீகம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும் சில முக்கியமான தகவல்களைப் பற்றி இந்த பதிவில் நாம் மிக மிக தெளிவாக பார்க்கலாம்.

                   பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் சனி பகவானைப் பற்றிய முரண்பட்ட தகவல்களும் மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன, சனி ஒரு தீய கோள்,முழு அசுபர், யாருக்கும் நன்மை செய்ய மாட்டார், சோம்பேறி, ஜாதகத்தில் சனி இருக்கும் பாவம், கெட்டுப்போகும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்,சனி திசை வந்தால் ஒரு மனிதன் அனைத்தையும் இழந்து விடுவார் இப்படி எல்லாம் சொல்வார்கள். ஆனால்  இது அனைத்தும் முற்றிலும் மிக மிக தவறாகும்.

                    நவகிரகங்களில் சனி பகவானையும் போன்று நீதி உடையவர் தர்மத்தின் பக்கம் நிற்பவர் நேர்மையானவர் யாருமே கிடையாது. சனி பகவான் தர்மத்திற்கும் கடமைக்கும் கண்ணியத்திற்கும் கட்டுப்பட்டவர் ஆவார்.  யாரெல்லாம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவற்றை எல்லாம் கடைப்பிடிக்காமல் தவறான பாதையில் செல்கிறார்களோ அல்லது நேர்மை தவறி அனைத்து காரியங்களிலும் தன்னுடைய செயல்பாடுகளை தவறாக செய்கிறார்களோ அவர்களை தான் சனிபகவான் சோதிப்பார்.



                    சனி பகவான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை ,பொறுமை, நிதானம், நிசப்தம், நாவடக்கம், சொல்லடக்கம், தன்னடக்கம்,தர்மம் இது எல்லாம் சனி பகவானின் ஒரு குணமாகும் அல்லது சனியின் காரணமாகும்.இது சார்ந்த விஷயங்களில் ஒரு மனிதன் எப்போது தன்னுடைய வாழ்க்கையில் இந்த கட்டுப்பாடுகளை தகர்த்து எறிகிறானோ அப்போதுதான் சனி பகவான் அவனை தண்டிப்பார் அல்லது பீடிப்பார்.

                    நவக்கிரங்களில் ஏன் சனி பகவானுக்கு மட்டும் அவ்வளவு சக்தி என்றால் சனி பகவான் சூரிய பகவானின் மகன் மட்டுமல்ல அவ்வாறு எம்பெருமான் சிவபெருமானின் அம்சம் ஆவார். சிவபெருமானுடைய அம்சத்துடனும் அவருடைய ஆசியுடனும் பிறந்தவர்தான் சனி பகவானாவார். இன்னும் சொல்லப்போனால் சிவபெருமானுடைய ஒரு அவதாரமாக கூட நாம் சனி பகவானை எடுத்துக் கொள்ளலாம். பூமியில் தர்மத்தையும் நியாயத்தையும் நிலைநாட்ட மனிதர்களை கெட்ட பாதையிலிருந்து நல்வழிக்கு கொண்டு வர அவதரித்தவர் தான் சனி பகவானாவார்.

                  அதே சமயம் சனி பகவான் அசிங்கத்திற்கும் அவமானத்திற்கும் அதிபதி ஆவர்.சூரியன் அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் தலை கணத்திற்கும் அதிபதி ஆவார். எப்போதுமே சூரிய பகவானுக்கும் சனி பகவானுக்கும் ஆகவே ஆகாது. எதிரும் புதிரும் ஆகவே எப்போதும் இருவரும் இருப்பார்கள்.  ஏனென்றால் சனி பகவானுக்கு அதிகாரத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவது அகங்காரத்தில் ஆடுவது இது எல்லாம் பிடிக்காது.ஆனால் சூரியனுக்கு தலை கணத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவது அதிகாரம் செய்வதுதான் பிடிக்கும்.  அதனால்தான் ஜோதிடத்தில் சூரியனுக்கு சனி பகவான் பகைவர் என்று சொல்கின்றனர்.அதற்கு இதுதான் காரணம்.

                      அதனால்தான் ஜோதிடத்தில் சூரிய பகவான் எந்த இடத்தில் உச்சம் ஆகிறாறோ அந்த இடத்தில் சனி பகவான் நீச்சம் ஆகிறார் சனி பகவான் எந்த பாவத்தில் உச்சம் ஆகிறாறோ அந்த வீட்டில் சூரிய பகவான் நீச்சம் ஆகிறார்.அதற்கு இதுதான் காரணம்.  அதனால்தான் காலபுருஷ தத்துவத்தில் மேஷத்தில் சூரிய பகவான் உச்சம் ஆகிறார் அதே பாவத்தில் சனி பகவான் நீச்சம் ஆகிறார் அதேசமயம் துலாத்தில் சனி பகவான் உச்சம் ஆகிறார்.அதே பாவத்தில் சூரிய பகவான் நீச்சம் ஆகிறார்.எப்போதுமே காலபுருஷ தத்துவத்தின்படி படையில் சனி பகவானும் சூரிய பகவானும் ஒருவரை ஒருவர் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

                      இருவருக்குமே ஏழாம் பார்வை இருக்கிறது எனவே சனி பகவானின் பார்வையிலிருந்து சூரியபகவான் எப்போதுமே விலக மாட்டார்.நான் சொல்வது காலபுருஷ தத்துவத்தின்படி ஒருவருக்கொருவர் எப்போதுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.இதுதான் சூரியனுக்கும் சனிக்கும் இருக்கும் தொடர்பாகும்.  கால பைரவருக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. பிரம்ம தேவருக்கும் சிவபெருமானுக்கும் இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் எழுந்தது நான் பெரியவனா இல்லை நீ பெரியவனா இதுபோன்ற பிரச்சினை வந்தது. பிரம்ம தேவருக்கு முதலில் 5 தலைகள் இருந்தது.அந்த ஐந்தாவது தலையை தான் கர்வம் கொண்ட அகங்காரம் கொண்ட குணங்களைக் கொண்ட தலையாகும். சிவபெருமானைப் பற்றி பிரம்மதேவர் அகங்காரதிலும் ஆணவதிலும் சில தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிக்கொண்டே இருந்தார் உடனே கோபமடைந்த சிவபெருமான் காலபைரவரை வரவழைத்தார்.



                 கால பைரவரிடம் சிவபெருமான் என்னுடைய கட்டளைக்கிணங்க என்னுடைய ஆணைக்கிணங்க நீ சென்று பிரம்மதேவனின் அந்த அகங்காரம் கொண்ட ஐந்தாவது தலையை பிடுங்கி எடுத்து விடு என்று ஆணையிட்டார். ஆனால் காலபைரவர் செய்த தவறு என்னவென்றால் பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை பிடுங்கும் போது சிவபெருமான் இட்ட கட்டளையை ஏற்று நான் உங்களை தண்டிக்கிறேன் என்று சொல்லவில்லை.காலபைரவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய பலத்தை பார் என்று சொல்லி ஆணவத்தில் அந்த ஐந்தாவது தலையை வெட்டிவிட்டார். அப்படி காலபைரவர் ஆணவத்துடன் பிரம்மதேவரின் ஐந்தாவது தலையை வெட்டும் போது சனி பகவான் காலபைரவரை பார்த்துவிடுகிறார். அதனால் வெட்டப்பட்ட அந்தக் தலை கால பைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது.

               சனி பகவான் காலபைரவரை பார்த்து என்ன சொன்னார் என்றால் நான் மனிதர்களையே அகங்காரத்தில் ஆடக்கூடாது ஆணவத்தில் ஆடக்கூடாது என்று சொல்கிறேன் நீ ஒரு கடவுளாக இருந்து கொண்டு எப்படி நீ அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடினாய் அதற்கான தண்டனையை நீ அனுபவித்து தான் ஆக வேண்டும் நீ எப்போது உன் அகங்காரத்தை ஆணவத்தை உடைக்கிறாயோ அப்போதுதான் இந்த சாபத்திலிருந்து உனக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சனி பகவான் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.   கடைசியில் கால பைரவர் தன்னுடைய கையில் ஒட்டிக் கொண்ட திருவடி உடன் அனைத்து தேவர்களிடமும் அனைத்து கடவுளிடமும் சென்று பிச்சை எடுத்தார்.அதன் மூலம் தன்னுடைய ஆணவத்தையும் தான் செய்த குற்றத்தையும் உணர்ந்து அனைத்தையும் விட்டு திருந்தினார். அப்போதுதான் காலபைரவருக்கு சாப விமோசனம் கிடைத்தது கடவுளுக்கே இப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் சிந்தித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment