Saturday, January 15, 2022

உமிழ் நீர், உயிர் நீர்..!

 உமிழ் நீர், உயிர் நீர்..!

◆ 108  வியாதிகளுக்கும் ஒரே மருந்து....

◆ அதுவேஉமிழ் நீர், உயிர் நீர் !

◆ சர்க்கரை நோய்க்கான எளிய,  இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே

இருக்கு ! உமிழ் நீராக இருக்கு !

◆ சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் 

என்ன சம்பந்தம் ?

◆ உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது !

◆ உமிழ் நீர் எனும் இயற்கை மருந்தை, நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே, அதிக அளவு எடுத்துக் கொண்டனர் !

◆ வாழ்வதற்காக  உண்டனர்உண்பதற்காக வாழ்ந்தனர் !

◆ அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு உண்டனர் ! அதனால், அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !

◆ கூடுதலாக உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச்  சிறிதளவு எடுத்துக் கொண்டனர் !

◆ நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !

◆ உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் வராது !

◆ "தூண்டல், துலங்கல்" என்ற விதியின்படிஉமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !

◆ நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு,  வேலை பார்த்தனர் !

◆ தற்காலத்தில், நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை  பார்க்கிறோம் !

◆ அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !

◆ வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !

◆ உணவை ரசித்து, ருசித்துமென்று, உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்அவசர அவசரமாக வாயில் போட்டு, லபக் லபக் என்றுவிழுங்குகிறோம் !

நாம் விழுங்கும் உணவில், உமிழ் நீர் கலக்க வாய்ப்பு இல்லாததால்நாம் உண்ணும்  உணவுக்கு தேவையான இன்சுலின், கணையத்தில் சுரக்காது !

◆ எனவே, உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடுகிறது !

◆ நாளடைவில், சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும்நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !

◆ சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்துநம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !

◆ எனவேநாம் சாப்பிடும்போது, உணவை மெதுவாக மென்றுரசித்து, ருசித்து, சாப்பிட வேண்டும் ! அப்போது, இயற்கையாக உமிழ்நீர் சுரக்கும் !

◆ கூடுதலாக, உணவு செரிமானமும் சிறப்பாக நடக்கும் ! ஜீரணக் கோளாறு என்ற பேச்சுக்கே இடம் இல்லை ! நோயற்ற வாழ்வு வாழலாம் !

◆ குடிநீர், குளிர் பானம், கூழ், சூப்தேநீர் அருந்தினால் கூடஉமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள் போகிறபடி, மெதுவாக ரசித்து, ருசித்துஅனுப்ப வேண்டும் !

◆ நீரிழிவு நோய் எனும் தற்கால கொடிய நோயை,  'உமிழ்நீர்' எனும்அற்புத அமிர்தம் கொண்டு, அழித்துஒழிப்போம் !

◆ " நொறுங்கத் தின்றால், நூறு வயசு..." என்று, நம் முன்னோர்கள் சொன்னார்கள் !

◆ Veg / Non – Veg  எந்த வகை உணவானாலும், கூழ், தேநீர், சூப் போன்ற எந்த உணவானாலும்...

1. பசித்த பின் சாப்பிட வேண்டும் !

2. ரசித்து சாப்பிட வேண்டும் !

3. உமிழ் நீர் சுரக்கிறபடி மென்று, ருசித்து, சாப்பிட வேண்டும் !

◆ 108  வியாதிகளுக்கும் இதுவே மருந்தென்றால்,மிகை அல்லஎல்லோரும் இதை படித்து  கடைபிடித்து பயன் பெறுங்கள்.

No comments:

Post a Comment