Tuesday, January 11, 2022

நேர்மறை எண்ணமும், எதிர்மறை எண்ணமும்

 நேர்மறை எண்ணமும், எதிர்மறை எண்ணமும்

      நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது. ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை

   சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறதுஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

    ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும்ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறைய திறன் தேவைப்படுகிறது.

       உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளதுஎன்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடிகுண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்க மாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

    அதே போலகோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும்அதனால் தான் மிகச் சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்து விடுகின்றன.ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகி உள்ளது. அது தான் காரணம்அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான்மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும் தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை.

      அச்சம் தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்தக் கட்டத்தில் தான் தோன்றுகிறது. அதனால் தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக் கொள்கிறது. அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும். இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணம் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும்

     நேர்மறை எண்ணம் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்! *அச்சம், கோபம், போன்ற எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன.* *அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற நேர்மறை எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை.* *வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் சிக்கல்கள் உள்ளன.* *நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவது* *இல்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள் தான்* *நம்மைத்துன்புறுத்துகின்றன.* *நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும், மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!*


No comments:

Post a Comment